வணக்கம் நண்பர்களே!
5ம் பாவம் 4ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால் அந்த ஜாதகருக்கு கற்பனை வளம்
குறைவாக இருக்கும். மேலும் இவருக்கு போட்டிகள் அதிகம் இருக்கும் என்று பார்த்தோம்.
இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 5ம்
பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.
5ம் பாவம் 5ம் பாவ தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் நன்றாக கலை நயத்துடன் போசுபவராக இருப்பார். கவிதை நடையுடன் அவருடைய பேச்சு இருக்கும்.
இவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் சாதகமாக இருந்தால் பெண்கள் தொடர்பு
அதிகம் கொண்டவராக இருப்பார். மேலும் திரைப்பட துறையுடன் நெருங்கிய தொடர்பு
உடையவராக விளங்குவார். இவருக்கு கதை எழுதுவது, திரைப்படத்தில்
நடிப்பது போன்றவை பிடிக்கும்.
ஆனால் சுக்கிரன் கெட்டு இருந்தால் பெண்கள் மூலம் அசிங்க அவமானங்களை
அடைவார். இவர்களால் அரசியலில் பெரிய
பொறுப்பிற்கு வரும் வாய்ப்புகள் குறைவு. தன்னுடைய சந்தோசத்திற்காக பணம் மற்றும் நேரத்தை
அதிகம் செலவிடுபவராக இருப்பார்.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
No comments:
Post a Comment