ஒரு கிரகம் ராசி மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ளது என்பதை,
அந்த கிரகம் ஒரு குறிப்பிட்ட ராசியில் உள்ளது என்று கூறுவதை விட, அந்த ராசியில் எந்த
நட்சத்திரத்தில் உள்ளது என்று கூறுவதுதான் சிறப்பு. அதை விட அந்த கிரகம், அந்த
நட்சத்திரத்தில் உள்ள எந்த உபநட்சத்திரத்தில் உள்ளது என்று கூறுவதே சரியானது.
உதாரணமாக அஸ்வினி என்ற நட்சத்திரத்தினை எடுத்துக்கொள்வோம். இதன் அதிபதி
கேது. அந்த அஸ்வினி நட்சத்திரம் 9 பாகமாக பிரிக்கப்பட்டு அதன் முதல் பகுதி
கேதுவிற்கும் அடுத்த பிரிவுகள் சுக்கிரன்,சூரியன்,சந்திரன் என தசை முறைப்படி
அமையும்.
அதாவது ஒரு தசா ஆரம்பிக்கும் போது முதல் புத்தி எப்படி தசா நாதனின்
சுய புத்தியாக வருகின்றதோ அதே முறைப்படி தான் உபநட்சதிரம் அமைகின்றது. ஒரு தசாவில்
உள்ள அனைத்து புத்திகளும் ஒரே ஒரே கால அளவை கொண்டிருக்காது. ஒவ்வொரு புத்தியும் தன்
தசா கால அளவிற்கு ஏற்ப புத்தியின் கால அளவை கொண்டு இருக்கும். அதே போல ஒரு
நட்சத்திரத்தில் உள்ள 9 கிரகங்களின் உப நட்சத்திரங்களும் சமான பாகையை பெற்றிருக்காது.
அதாவது ஒரு நட்சத்திரம் என்பதனை தசாவாக எடுத்துகொண்டால் அந்த தசாவில்
உள்ள புத்திகளை உபநட்சதிரமாக எடுத்து கொள்ளலாம்.
நட்சத்திரத்தின் உட்பிரிவான உப நட்சத்திரம், பலன் கூறுவதில்
ஜாதகருக்கு தனி தன்மையை நிர்ணயம் செய்யும். ஒரு நட்சத்திரத்தில் ஒரு சில பகுதிகள்
நன்மையும், சில பகுதிகள் தீமையும், மற்ற பகுதிகள் நடுநிலை என ஒரு குறிப்பிட்ட செயலுக்கு
அமையும். ஏனென்றால் ஒரு நட்சத்திரத்தின் முழு பகுதியும் ஒரே மாதிரியான பலன்களை
தருவதில்லை.
நன்றி நண்பர்களே!
சு.சுரேஷ்
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment