Wednesday, 23 July 2014

ஜாதகர் சொந்த தொழில் செய்வாரா? அல்லது மற்றவரிடம் பணிபுரிவாரா?



ஒருவருடைய ஜாதகத்தில் 6ம் பாவம் என்பது மற்றவரிடம் பணி புரிவதையும், உடல் உழைப்பையும் குறிக்கும். 7ம் பாவம் சொந்த தொழிலையும், வெளி உலக தொடர்பையும், நம்மிடம் தொழில் ரீதியாக தொடர்பு கொள்ளும் சரி சமமான நபர்களையும் குறிக்கும். 

பொதுவான விதி என்பது கர்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 2,6,10ம் பாவங்களோ அல்லது அதற்கு சாதகமான பாவங்களோ 6 மற்றும் 10 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவற்றின் ரீதியாக ஜாதகருக்கு தொழில் அமையும்.

7ம் பாவம் 2,10ம் பாவங்களுக்கு சாதகமற்ற பாவங்களுடன் தொடர்பு கொள்ளும் பொழுது, ஜாதகர் தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் சம்பாதிக்க முடியாது. அதாவது சொந்த தொழில் கொடுப்பினை இல்லை என்று கூறலாம். மேலும் இவர் தொழில் செய்தால் வருமானம் வராது, அல்லது பெரிதாக உழைக்க மாட்டார்.

6ம் பாவம் 2,4,6,10 பாவங்களுடனோ அல்லது அதற்கு சாதகமான பாவங்களுடனோ தொடர்பு கொண்டு இருந்தால் வாழ்க்கையின் பெரும் பகுதி அடுத்தவரிடம் வேலை பார்ப்பார். மேலும் 6ம் பாவம் 8,12 ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால் மற்றவரிடம் ஜாதகர் அடிமை வேலை பார்க்க நேரிடும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது.

நன்றி நண்பர்களே!
Su.Suresh

astrovaasan@gmail.com

No comments:

Post a Comment