Friday, 27 November 2015

மெட்டி


வணக்கம் நண்பர்களே!

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து போட்ட மெட்டியை நிறைய பெண்கள் இன்று கழட்டி வைத்து விடுகின்றனர். அது தவறு. மெட்டி அணியாமல் கணவனுடன் வாழ்ந்ததால் அவர்களுக்கு குழந்தை கிடைக்காது. இது நானாக சொல்லவில்லை நண்பர்களே. திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்தர் எழுதி வைத்தது.

இந்த பதிவினை படிக்கும் யாருக்காவது குழந்தை இல்லை என்றால் நீங்கள்/உங்கள் (மனைவி) மெட்டி போட்டு இருக்கிறாரா? என்று பாருங்கள். இல்லை என்றால் புதிதாக வங்கி கொடுத்து அணிந்து கொள்ள சொல்லுங்கள்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH

99946 90117

Wednesday, 25 November 2015

சொந்த தொழில்


வணக்கம் நண்பர்களே!

சொந்த தொழில் செய்வது என்பது அனைவரின் கனவு. அது அனைவருக்கும் நனவாவது இல்லை. இன்று ஒரு நபர் எனக்கு போன் செய்து நான் சொந்தமாக தொழில் செய்து வருகிறேன். அதிகமாக பிரச்சினை மற்றும் கடன் ஏற்பட்டுள்ளது.

இந்த தொழிலை மாற்றலாமா? என்னுடைய மனைவியின் பெயரில் செய்யலாமா என்று கேட்டார். இந்த தவறினை எல்லோரும் செய்வது தான். ஜாதகத்தினை வைத்து ஒருவர் என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது என்பதனை தெரிந்து கொள்ளலாம். ஒருவருக்கு சொந்த தொழில் செய்ய யோகம் இல்லை என்றால் அடுத்தவர் பெயரில் தொழில் ஆரம்பித்து நாம் அதனை செய்வதும் பிரச்சினை தான் (இதனை சரி செய்ய முயற்சி செய்யலாம்).

ஒரு தொழிலை ஆரம்பிக்க கண்டிப்பாக கொடுப்பினை வேண்டும். நல்ல பெயர், அனுபவம் இல்லாமல் தொழிலில் ஈடுபட வேண்டாம். செய்யப் போகும் தொழில் உங்களுக்கு ஏற்றதா, நீண்ட காலம் தொடர்ந்து ஈடுபடலாமா  என்பதனை தெரிந்து கொண்டு செய்யல் படுங்கள், வெற்றி உங்களுக்கே!

நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117


Monday, 23 November 2015

சுண்ணாம்பு கோலம் வேண்டாம்!


வணக்கம் நண்பர்களே!

முதலில் பசுஞ்சாணம் தெளித்து அதன்மீது கோலத்தைப் போட வேண்டும். கோலத்தை அரிசி மாவினால் தான் போட வேண்டும். சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக் கூடாது. 

சுண்ணாம்பு மாவினால் கோலம் போட்டால் வீட்டில் வறுமை உண்டாகும். தரித்திர நிலை உண்டாகும். 

வாசலில் கோலம் போடாமல் கணவனை வெளியில் அனுப்பினால் கடன் காரணமாகச் சண்டை வரும். பகைமை வளரும். 

அரிசி மாவினால் கோலம் போடவில்லையென்றால் சேர்த்து வைய்த்த பணம் கரைந்து போய் விடும். 
எனவே எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் தீர வில்லை, கையில் பணம் தங்கவில்லை என்று கூறுபவர்கள் வீட்டில் இன்று முதல் அரிசி மாவினால் கோலம் போடுங்கள். 

பலன் விரைவில் கிட்டும்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

Friday, 20 November 2015

எண்ணை குளியல்


வணக்கம் நண்பர்களே!

பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் எண்ணை குளியல் செய்ய வேண்டும். 

செவ்வாய் கிழமை எண்ணை குளியல் செய்யா விட்டால் ஜீவன ஸ்தானத்திற்கு பிரச்சினை உண்டாகும். 

வேலைக்கு போகும் பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினைகள் வரும். 

வெள்ளிக் கிழமை எண்ணை குளியல் செய்யாவிட்டால் கணவனிடமும் குடும்பத்தாரிடமும் தேவை இல்லாமல் சண்டை வரும். 

ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளில் எண்ணை குளியல் செய்ய வேண்டும். 

ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமை எண்ணை குளியலை மறந்தால் மகன் மீது தந்தைக்கு வெறுப்பு வரும். தந்தையுடன் கருத்து வேறுபாடு வரும்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

மனைவி உணவு பரிமாறும் முறை


வணக்கம் நண்பர்களே!

“சாப்பாடு பாத்திரத்தில் இருக்கின்றது. நீயே சாப்பிட்டுக் கொள்” என்று மனைவி சொன்னால் பங்காளி சண்டை வரும்.

மேலும் பெண்கள் கணவனுக்கு உணவு பரிமாறும் போது மாங்கல்யம், நெற்றி, தலையின் நாடு வகிடு ஆகிய மூன்று இடங்களிலும் குங்கும்மிட்டு இருக்க வேண்டும். இல்லை என்றால் நண்பர்களுடன் சண்டை வரும்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH

99946 90117

Thursday, 19 November 2015

குரு + சுக்கிரன்

வணக்கம் நண்பர்களே!

யாருக்கு குருவுடன் சுக்கிரன் இணைந்தோ அல்லது குரு இருக்கும் ராசியில் இருந்து 2,5,9 இடங்களில் சுக்கிரன் இருந்தால்

·         ஜாதகர் அழகானவர். அழகான கண்கள் உடையவர்.
·         அதிக காம உணர்வு கொண்டவர்.  மீனத்தில் இந்த தொடர்பு இருந்தால் அதிக பெண்களுடன் தொடர்பு மற்றும் மதுவின் தொடர்பிலும் இருப்பார்.
·         சொகுசான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வார்.
·         நடிப்பு துறை, இசை சம்மந்தமான விசயங்களில் ஆர்வம் அதிகம் இருக்கும்.

·         ஜாதகர் பெண்ணாக இருந்தால் தெய்வ பக்தி நிரம்பியவராகவும், ஒழுக்கமுடனும் இருப்பார்.

நன்றி நண்பர்களே!

SU.SURESH
99946 90117

குரு + கேது

வணக்கம் நண்பர்களே!

யாருக்கு குருவுடன் கேது இணைந்தோ அல்லது குரு இருக்கும் ராசியில் இருந்து 2,5,9 இடங்களில் கேது இருந்தால்

·         ஜாதகர் ஒரு ஆன்மீகவாதி
·         இல்லற நாட்டம் அதிகம் இருக்காது.
·         மன அழுத்தம் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும்.
·         வெறுமையான வாழ்க்கை வாழ்வார்கள்.
·         வெளியுலக காரணிகள் இவர்களை எளிதாக பாதிக்க முடியாது. இவராக குழப்பிக் கொண்டு பாதிக்கப் படுவார்.
·         இந்த சேர்க்கை பண சம்மந்தப் பட்ட விசயங்களில் மிக நன்றாகவும், இல்லற வாழ்வில் பிரச்சினை நிறைந்ததாகவும் இருக்கும்.
·         குரு, கேது சேர்க்கை சம்யோகம் ஆகும்.  

·         மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும்.  மூக்கில் அடைப்பு இருக்கும்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

தலைவிரி கோலம் வேண்டாமே!


வணக்கம் நண்பர்களே!

மனைவியானவள் தலைமுடியை விரித்துக் கொண்டு கணவனை வழி அனுப்பக் கூடாது. கணவன், “நான் வெளியே சென்று வருகிறேன்” என்று  சொல்லும் போது தலைவிரி கோலத்துடன் “போய் வாருங்கள்” என்று சொல்லக்கூடாது. 

இவ்வாறு சொல்லுவது மிகத் தவறானது. ஈரத் தலையாக இருந்தாலும் கூந்தலின் நுனியில் ஒரு சிறு முடியாவது போட வேண்டும். இவை அந்த காலத்தைய வழக்கமாகும். ஆனால் இன்று தலைவிரி கோலம் FASHION.  

மனைவியானவள் தலைவிரி கோலத்துடன் கணவனை வழியனுப்பினால் அலுவலகத்தில் அதிகாரியுடன் சண்டை ஏற்படும். 

முடிந்தவரை தவிருங்கள். 

நன்றி நண்பர்களே!

SU.SURESH
99946 90117

Tuesday, 17 November 2015

குரு + புதன்

வணக்கம் நண்பர்களே!

யாருக்கு குருவுடன் புதன் இணைந்தோ அல்லது குரு இருக்கும் ராசியில் இருந்து 2,5,9 இடங்களில் புதன் இருந்தால்

·         ஜாதகர் நல்ல புத்திசாலி
·         பெண்கள் மேல் அதிக மோகம் கொண்டவர்.
·         கலைகளில் ஆர்வம் உடையவர்.
·         நகைச்சுவை உணர்வு உடையவர்.
·         ஜாதகர் நல்ல கணித புலமை உடையவர்

நன்றி நண்பர்களே!

SU.SURESH

99946 90117

குரு + சனி

வணக்கம் நண்பர்களே!

யாருக்கு குருவுடன் சனி இணைந்தோ அல்லது குரு இருக்கும் ராசியில் இருந்து 2,5,9 இடங்களில் சனி இருந்தால்

·         ஜாதகர் சிறு வயதிலேயே வேலைக்கு செல்லுவார்.
·         நல்ல வேலையில் இருப்பார். அமைதியானவர்
·         இவரின் வருமானம் மிக முக்கியமானதாக இருக்கும் குடும்பத்தில்.
·         கார வகை உணவுகளை அதிகம் உண்பார்கள்.

·         தான் செய்யும் தொழிலில் படிப்படியாக முன்னேறி உயர்ந்த நிலையை  அடைவார்.

நன்றி நண்பர்களே!

SU.SURESH
99946 90117

Friday, 13 November 2015

திருமண பொருத்தம்


வணக்கம் நண்பர்களே!


திருமண பொருத்தம் மற்றும் நட்சத்திர பொருத்தம் பார்ப்பது என்பது சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கிடையாது. ஏனென்றால் முனோர்கள் செய்த திருமணங்கள் குல வழக்கப்படியும், அவர்கள் வாழ்ந்த சூழலுக்கு ஏற்றவாறும் செய்தனர். அதனால் பெரிதாக பிரச்சினைகள் ஏதும் பெரிதாக வரவில்லைசமுதாயத்தற்கும் குல தர்மத்திற்கும் கட்டுபடாத திருமணங்கள் நடைபெற ஆரம்பித்த பொழுது திருமண பொருத்தம் தலை தூக்க ஆரம்பித்தது.

பெண் குடும்பத்தை பற்றியோ, ஆண் குடும்பத்தை பற்றியோ பரம்பரை, பரம்பரையாக தெரிந்தவர்கள் திருமண பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இரு குடும்பத்திலும் உள்ள அனைத்து நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து மனம் முடிக்கலாம்.

காந்தர்வ மணம் என்பது கிரகத்தின் தூண்டுதாலும், கர்மாவலும் ஏற்படும். இந்த தன்மையுடைய திருமணதிற்கு ஜாதகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி பார்த்தாலும் பெரிதாக பலன் அளிக்காது.

நன்றி நண்பர்களே!

SU.Suresh

99946 90117

திருமண முறைகள்


வணக்கம் நண்பர்களே!

காந்தர்வம்ஒரு ஆணும் பெண்ணும் திருமணதிற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு பெரியோர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளுவது காந்தர்வம் என்பர்.

பைசாசம்ஒரு ஆண் விருப்பம் இல்லாத பெண்ணை கட்டாயப் படுத்தி கேவலமான செயல்களை செய்து மனம் முடித்துக் கொள்ளுவது பைசாசம் என்பர்.

ஆஸீரம்வயது வித்தியாசம் இல்லாமல் ஒரு பெண்ணின் தந்தைக்கு பணத்தினை கொடுத்து அந்த பெண்ணை காம நோக்குடன் திருமணம் செய்து கொள்ளுவது ஆஸீரம் என்பர்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH

9994690117

குரு + ராகு

வணக்கம் நண்பர்களே!

யாருக்கு குருவுடன் ராகு இணைந்தோ அல்லது குரு இருக்கும் ராசியில் இருந்து 2,5,9 இடங்களில் ராகு இருந்தால்

·         ஜாதகர் சற்று குண்டாக இருப்பார்.
·         வாழ்வில் கடுமையான பிரச்சினைகளை சந்திப்பார்.
·         வாழ்வில் கண்டங்கள் உண்டு.
·         ஜாதகர் பொய் அதிகம் பேசுவார்.
·         திருட்டுப் பழி ஜாதகர் மேல் வாழ்வில் விழும்.
·         அந்நிய நபர்களுடன் சேர்ந்து தீய வழியில் செல்வார்.
·         உடல் உபாதைகள் அதிகம் இருக்கும்.
·         ஜாதகருக்கு தெய்வ நம்பிக்கை குறைவாக இருக்கும்.
·         வெளிநாடு சம்மந்தமான தொடர்புகள் மற்றும் வேறு அந்நிய மதத்தினை சேர்ந்தவர்களின்  தொடர்புகள் கிடைக்கும்.
·         தோல் மற்றும் அலர்ஜி போன்ற நோய்கள் வரும்.

நன்றி நண்பர்களே!
SU.SURESH

9994690117

Thursday, 12 November 2015

குரு + செவ்வாய்

வணக்கம் நண்பர்களே!

யாருக்கு குருவுடன் செவ்வாய் இணைந்தோ அல்லது குரு இருக்கும் ராசியில் இருந்து 2,5,9 இடங்களில் செவ்வாய் இருந்தால்

·         ஜாதகருகுக்கு அதிகம் கோபம் வரும்.
·         எப்பொழுதுமே அடுத்தவரிடம் சண்டையிட்டுக் கொண்டு கடுமையான சொற்களை வீசுபவராக இருப்பார்.
·         ஜாதகரின் சகோதரர்கள் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள். அவர்களால் ஜாதகருக்கு பெருமை உண்டாகும்.
·         ஜாதகர் பெண்ணாக இருந்தால் அவருக்கு அமையும் கணவர் சாந்த குணமுடையவர்.
·         ஜாதகருக்கு இரத்த மற்றும் இருதய சம்மந்தமான நோய்கள் வரலாம்.
·         ஜாதகருக்கு அறுவை சிகிச்சை செய்யக் கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம்.
·         ஜாதகருக்கு சொத்துக்கள் கிடைக்கும்

நன்றி நண்பர்களே!

SURESH

9994690117