வணக்கம் நண்பர்களே!
திருமண பொருத்தம் மற்றும் நட்சத்திர பொருத்தம் பார்ப்பது என்பது சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கிடையாது. ஏனென்றால் முனோர்கள் செய்த திருமணங்கள் குல வழக்கப்படியும், அவர்கள் வாழ்ந்த சூழலுக்கு ஏற்றவாறும் செய்தனர். அதனால் பெரிதாக பிரச்சினைகள் ஏதும் பெரிதாக வரவில்லை. சமுதாயத்தற்கும் குல தர்மத்திற்கும் கட்டுபடாத திருமணங்கள் நடைபெற ஆரம்பித்த பொழுது திருமண பொருத்தம் தலை தூக்க ஆரம்பித்தது.
பெண் குடும்பத்தை பற்றியோ, ஆண் குடும்பத்தை பற்றியோ பரம்பரை, பரம்பரையாக தெரிந்தவர்கள் திருமண பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இரு குடும்பத்திலும் உள்ள அனைத்து நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து மனம் முடிக்கலாம்.
காந்தர்வ மணம் என்பது கிரகத்தின் தூண்டுதாலும், கர்மாவலும் ஏற்படும். இந்த தன்மையுடைய திருமணதிற்கு ஜாதகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி பார்த்தாலும் பெரிதாக பலன் அளிக்காது.
நன்றி நண்பர்களே!
SU.Suresh
99946 90117
No comments:
Post a Comment