வணக்கம் நண்பர்களே!
நமக்கு தெரிந்த விடயம் தான், தர்மத்திலேயே சிறந்தது அன்னதானம். இன்று அன்னதானம் அனைவரும் செய்துவருவது தான். பொதுவாக நீங்கள் உங்களுடைய பிறந்தநாள், திருமண நாள் போன்ற சுப காரியங்களுக்கு தான் அன்ன தானத்தினை செய்து வருவீர்கள். அல்லது உங்களது ஜாதகத்தினை யாரவது ஒரு ஜோதிடரிடம் காட்டும் பொழுது அவர் செய்யச் சொன்னாள் செய்வீர்கள்.
ஆனால் நாம் தானத்தினை அடிக்கடி செய்யும் வழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் புதிதாக தொடங்கும் அணைத்துக் காரியங்களுக்கும் முன்பும் தானம் செய்து உங்களுடைய காரியத்தினை தொடங்கினால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். அல்லது நீங்கள் ஆரம்பித்த காரியத்தினால் வரவேண்டிய பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் குறைவாக உங்களை வந்து சேரும்.
மனிதர்களுக்கு மட்டும்தான் தானம் தர வேண்டும் என்று இல்லை. ஐந்து அறிவு படைத்த உயிரினங்களுக்கும் அன்ன தானம் செய்யலாம். செடிகள் நிறைந்துள்ள இடங்களில் நவதானியங்களை தூவுவது, அரிசிமாவு போன்ற கெட்டுப்போகாத உணவு வகைகளை தூவி விடுவதால் எறும்பு முதலான உயிரினங்களின் ஆசிகளையும் நீங்கள் கண்டிப்பாக பெறலாம். இந்த ஆசீர்வாதம் உங்களுடைய வம்சத்தினை சந்தோசமாக வாழ வழிவகை செய்யும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
No comments:
Post a Comment