Friday, 24 July 2015

மன அமைதிக்கு மூன்றாம் பிறை தரிசனம்


வணக்கம் நண்பர்களே!

வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும். சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி “சந்திர மௌலீஸ்வரராக” காட்சி தருகின்றார். எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் ஒரு பகுதியே நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம்.

இந்த சந்திர தரிசனம் கிட்டும் போதெல்லாம் “ஸ்ரீசந்திர மௌலீஸ்வராய நம!” அல்லது “ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா போற்றி” என்ற இடைவிடாமல் ஜெபித்து வந்தால் மனம் அமைதி அடையும். அறிவு ஒளி பெற்றுத் தெளிந்த மனநிலையை அடையலாம். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எக்காலதிலும் மன வியாதிகளோ, அறிவு மயக்க நிலையோ(கோமா) வராது.

காஞ்சீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீபரமாச்சார்யாள் ஸ்ரீபோடா சித்த ஸ்வாமிகள் ஆகியோரின் ஜீவ சமாதிகளை மூன்றாம் பிறை தரிசனம் கண்டவுடன் சென்று வணங்கி வழிபடுவது உத்தமப் பலன்களைத் தரும்.

நன்றி நண்பர்களே!
SURESH

99946 90117

No comments:

Post a Comment