Saturday, 11 July 2015

குழந்தை பிறப்பதில் பிரச்சினை யாருக்கு?


ஓம் 

வணக்கம் நண்பர்களே!

ஆண்களுடைய ஜாதகத்தில் விந்துவை குறிக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். மேலும் விந்துவில் உள்ள உயிர் அணுக்களை குறிக்கும் கிரகம் சூரியன் ஆகும். பெண்களுடைய ஜாதகத்தில் கருமுட்டையை குறிக்கும் கிரகம் இந்த சுக்கிரன் தான். எனவே ஆணோ பெண்ணோ சுக்கிரன் வலுவாக இருந்தால் கண்டிப்பாக குழந்தை உண்டு.

சுக்கிரனும் சூரியனும் ஒரே நட்சத்திர பாதத்தில் ஒரே ரசியில் இருந்தால் விந்துவில் உள்ள உயிர் அணுக்கள் இறந்துவிடும். ஏனென்றால் சூரியன் என்பது நெருப்பு கிரகம். விந்துவும் நெருப்பும் அருகே இருந்தால் விந்துவில் உள்ள உயிர் அணுக்கள் இறந்துவிடும்.

சுக்கிரனும் சந்திரனும் ஒரே நட்சத்திர பாதத்தில் ஒரே ராசியில் இருந்தால் விந்து நீர்த்து போகும். உயிரணுக்கள் மிகக் குறைவாக இருக்கும்.

பெண்களுடைய ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனும் ஒரே நட்சத்திர பாதத்தில் ஒரே ராசியில் இருந்தால் கருமுட்டை கருப்பையில் தங்காது. நீர் கிரகமாகிய சந்திரன் கர்பப்பையில் இருந்து கழிவினை வெளியேற்றிக் கொண்டே இருப்பார். இதுவே வெட்டை என்ற வெள்ளைப்படுத்தல் நோய் ஆகும்.

மேலும் சுக்கிரனுக்கோ, சூரியனுக்கு 1,5,9ல் அல்லது 2,6,1௦ல் ராகு இருந்தால் கர்பத்திலேயே கரு அழியும் அல்லது குழந்தை இறந்து பிறக்கும் அல்லது அற்ப ஆயுள் உள்ள குழந்தை பிறக்கும்.

மேலும் சுக்கிரனுக்கோ, சூரியனுக்கோ 1,5,9ல் அல்லது 2,6,1௦ல் கேது இருந்தால் கர்ப்பப்பை சிறியதாக இருக்கும் அல்லது அடைப்பு இருக்கும். எனவே குழந்தை பிறப்பதில் தடை ஏற்ப்படும்.

சூரியனுக்கு 1,5,9 ல் அல்லது 2,6,1௦ல் சனி கிரகம் இருந்தால் ஜாதகருக்கு முதுமையில் குழந்தை பிறக்கும். அல்லது தாமதமாக குழந்தை பிறக்கும். 

நன்றி நண்பர்களே!

SURESH
99946 90117

No comments:

Post a Comment