வணக்கம் நண்பர்களே!
ஒரு ஜீவனின் விதியை ஸ்ரீபிரம்ம தேவரே
நிர்ணயிக்கும் போது அது ஒரு சுழியுடன் பிறப்பு எடுக்கிறது. இச்சுழியே இறைவனின்
கையொப்பமாகும். பிரம்ம நிர்ணயித்த தலைவிதி முறைகள் கடுமையாக இருந்தால் ஆதிசிவன்
அவற்றைச் சற்று மாற்றி எழுதி வேறு விதமாக விதியை நிர்ணயிப்பது உண்டு. அத்தகைய
ஜீவன்களுக்கு ஸ்ரீபிரம்மா, சிவன் இருவருடைய முத்திரைகளும் இரட்டைச் சுழிகளாகக்
காட்டப்படுகின்றன.
எனவே, இரட்டைச் சுழிக்காரர்கள் எக்காரியத்தையும்
பொறுமை, அடக்கம், பணிவுடன் செய்தல் வேண்டும். இவற்றைப் பெற சிவன், பிரம்மா இருவரும்
எழுந்தருளியுள்ள திருத்தலங்களில் அடிக்கடி இறை தரிசனம், திருப்பணி, தான
தர்மங்களைச் செய்து வருதல் அவசியம்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள
திருக்கண்டியூர் ஸ்ரீபிரம்ம சிரஹரேஸ்வரர் ஆலயம் இரட்டைச் சுழி கொண்டோருக்கு
அளப்பரிய அனுக்கிரகத்தைத் தர வல்லது. இவர்கள் இத்திருத்தலத்தில் திருவோடு
தாங்கியோருக்கு அன்ன தானம் செய்தல் மிகவும் விசேஷமான பலன்களைத் தரும்.
நன்றி நண்பர்களே!
SU. SURESH
99946 90117
Super Sir
ReplyDelete