Sunday, 12 July 2015

பாலாரிஷ்ட தோஷம்


வணக்கம் நண்பர்களே!

பொதுவாக மரணத்தை கொடுக்கும் கிரகங்கள் என்பவை ராகுவும் கேதுவும் ஆகும். ராகு கொடுக்கும் மரணம் எதிர்பாராமல் நடப்பது. கேதுவால் நிகழும் மரணம் தெரிந்தே ஏற்றுக் கொள்ளுவது. சமாதி நிலை என்பது கேதுவால் நிகழ்வது தான்.

ஆண்களுடைய ஜாதகத்தில் ஜீவகாரகன் குரு. அதே போல் பெண்கள் ஜாதகத்தில் ஜீவகாரகன் சுக்கிரன்.

ஆண் குழந்தையின் ஜாதகத்தில் குரு நீச்சம் அடைந்து எந்த ஒரு கிரகத்தின் பார்வையோ சேர்க்கையோ இல்லாமல் ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்து இருந்தால் அந்த ஜாதகம் பாலாரிஷ்ட தோஷம் உடையது.

அதே போல் பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் அடைந்து எந்த ஒரு கிரகத்தின் பார்வையோ சேர்க்கையோ இல்லாமல் ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்து இருந்தால் அந்த ஜாதகம் பாலாரிஷ்ட தோஷம் உடையது.

மேற்கண்ட தோஷம் உடைய ஜாதகர் வீட்டில் 7 வருடங்கள் தொடர்ந்து அவரின் பெற்றோகள் மிருத்யுஜ்ஜெய ஹோமம் செய்ய வேண்டும்.


அன்னதானம் செய்ய வேண்டும். ஏழைகளின் மருத்துவ செலவிற்கு உதவ வேண்டும். குலதெய்வத்திற்கு உரிய பூஜைகளை தவறாமல் செய்து வேண்டிக் கொண்டால் நலத்தே நடக்கும்.

நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117

No comments:

Post a Comment