Friday, 24 July 2015

மன அமைதிக்கு மூன்றாம் பிறை தரிசனம்


வணக்கம் நண்பர்களே!

வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும். சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி “சந்திர மௌலீஸ்வரராக” காட்சி தருகின்றார். எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் ஒரு பகுதியே நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம்.

இந்த சந்திர தரிசனம் கிட்டும் போதெல்லாம் “ஸ்ரீசந்திர மௌலீஸ்வராய நம!” அல்லது “ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா போற்றி” என்ற இடைவிடாமல் ஜெபித்து வந்தால் மனம் அமைதி அடையும். அறிவு ஒளி பெற்றுத் தெளிந்த மனநிலையை அடையலாம். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எக்காலதிலும் மன வியாதிகளோ, அறிவு மயக்க நிலையோ(கோமா) வராது.

காஞ்சீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீபரமாச்சார்யாள் ஸ்ரீபோடா சித்த ஸ்வாமிகள் ஆகியோரின் ஜீவ சமாதிகளை மூன்றாம் பிறை தரிசனம் கண்டவுடன் சென்று வணங்கி வழிபடுவது உத்தமப் பலன்களைத் தரும்.

நன்றி நண்பர்களே!
SURESH

99946 90117

Thursday, 23 July 2015

காரியத் தடைகள் நீங்க



வணக்கம் நண்பர்களே!

வீடு வாங்குதல், வேலை வாய்ப்பு, திருமணம்,தீர்த்த யாத்திரை - இது போன்ற சில காரியங்கள் நாம் எவ்வளவு முறை முயற்சித்தாலும் சரிவர அமையாமல் ஏதேனும் ஒரு காரணத்திற்காகத் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும்.

இத்தகைய பிரச்சினையால் மனம் வருந்த்வோர் சென்னை-பல்லாவரம் அருகில் உள்ள திருநீர்மலை சென்று அங்கு “நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான்” என்று நான்கு திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ள பெருமாளை தரிசனம் செய்து ஏழைகளுக்குப் பானக நீர் தானம் செய்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தடைபட்டு வரும் எத்தகைய முறையான காரியமும் தடைகள் நீங்கி நிறைவேறும்.

நன்றி நண்பர்களே!

SURESH

99946 90117

Friday, 17 July 2015

இரட்டைச் சுழிக்காரர்களுக்கு



வணக்கம் நண்பர்களே!

ஒரு ஜீவனின் விதியை ஸ்ரீபிரம்ம தேவரே நிர்ணயிக்கும் போது அது ஒரு சுழியுடன் பிறப்பு எடுக்கிறது. இச்சுழியே இறைவனின் கையொப்பமாகும். பிரம்ம நிர்ணயித்த தலைவிதி முறைகள் கடுமையாக இருந்தால் ஆதிசிவன் அவற்றைச் சற்று மாற்றி எழுதி வேறு விதமாக விதியை நிர்ணயிப்பது உண்டு. அத்தகைய ஜீவன்களுக்கு ஸ்ரீபிரம்மா, சிவன் இருவருடைய முத்திரைகளும் இரட்டைச் சுழிகளாகக் காட்டப்படுகின்றன.

எனவே, இரட்டைச் சுழிக்காரர்கள் எக்காரியத்தையும் பொறுமை, அடக்கம், பணிவுடன் செய்தல் வேண்டும். இவற்றைப் பெற சிவன், பிரம்மா இருவரும் எழுந்தருளியுள்ள திருத்தலங்களில் அடிக்கடி இறை தரிசனம், திருப்பணி, தான தர்மங்களைச் செய்து வருதல் அவசியம்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள திருக்கண்டியூர் ஸ்ரீபிரம்ம சிரஹரேஸ்வரர் ஆலயம் இரட்டைச் சுழி கொண்டோருக்கு அளப்பரிய அனுக்கிரகத்தைத் தர வல்லது. இவர்கள் இத்திருத்தலத்தில் திருவோடு தாங்கியோருக்கு அன்ன தானம் செய்தல் மிகவும் விசேஷமான பலன்களைத் தரும்.

நன்றி நண்பர்களே!
SU. SURESH
99946 90117

கடன் தொல்லையா? கவலை வேண்டாம்!



வணக்கம் நண்பர்களே!

தற்காலத்தில் கடன் வாங்கிக் கஷ்டப்படுபவர்கள் ஏராளம். அவ்வாறு நிறைய கடன் பிரச்சினைகளால் துன்பப்படுவோர், சென்னை – திருத்தணி சாலையில் உள்ள திருநின்றவூர் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாள் ஆலயத்திர்க்குச் சென்று, அங்கப் பிரதட்சிணம் செய்து அங்குள்ள ஏழை எளியவருக்கு நிலக்கடலை கலந்த புளியோதரையை தானமாக அளித்து வர வேண்டும்.

ஆழ்ந்த நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வந்தால் கடன் தொல்லைகள் இறை அருளால் நிச்சயமாகக் குறையும்.

நன்றி நண்பர்களே!

SURESH
99946 90117

Thursday, 16 July 2015

பல் நோய்க்கான கிரக சேர்க்கைகள்


வணக்கம் நண்பர்களே!

பற்களை குறிக்கும் கிரகம் செவ்வாய் ஆகும்.

செவ்வாய்க்கு 1,5,9 அல்லது 2ல் சனி இருந்தால் பல்வலி ஏற்ப்படும். பல் சொத்தை ஆகி அதனை எடுக்க வேண்டி வரும் அல்லது விழுந்து விடும்.

செவ்வாய்க்கு 1,5,9 அல்லது 2ல் ராகு அல்லது கேது இருந்தால் பல் ஒழுங்கு இல்லாமல் விகாரமாக இருக்கும்.

செவ்வாய்க்கு 1,5,9 அல்லது 2ல் ஒரு வக்கிர கிரகம் இருந்தாலோ அல்லது பகை கிரகம் இருந்தாலோ பல்லில் பிரச்சினைகள் உண்டு.

நன்றி நண்பர்களே!

99946 90117

கண் நோய்க்கான கிரக சேர்க்கைகள்


வணக்கம் நண்பர்களே!

சூரியன் வலது கண்ணையும், சந்திரன் இடது கண்ணையும் குறிக்கும்.

சூரியனுக்கு 1,5,9 அல்லது 2ல் சனி அல்லது ராகு அல்லது கேது இருந்தால் கண் பார்வை குறைபாடு இருக்கும்.

சூரியனுடன் ஏதாவது ஒரு வக்கிர கிரகம் இணைந்து இருந்தால் கண் பார்வை குறைபாடு இருக்கும்.

சந்திரனுக்கு 1,5,9 அல்லது 2ல் சனி அல்லது ராகு அல்லது கேது இருந்தால் கண் பார்வை குறைபாடு இருக்கும்.

சந்திரனுடன் ஏதாவது ஒரு வக்கிர கிரகம் இணைந்து இருந்தால் கண் பார்வை குறைபாடு இருக்கும்.

நன்றி நண்பர்களே!

SURESH

99946 90117

Monday, 13 July 2015

கணவன் மனைவி அன்புடன் இருக்கும் ஜாதக அமைப்பு


வணக்கம் நண்பர்களே!

ஆணின் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் ஒரே ராசியில் இருந்தாலோ அல்லது ஒருவருக்கொருவர் 2,5,9 ராசிகளில் இருந்தாலோ கணவனும் மனைவியும் அன்புடன் இருப்பார்கள்.


பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் ஒரே ராசியில் இருந்தாலோ அல்லது ஒருவருக்கொருவர் 2,5,9 ராசிகளில் இருந்தாலோ கணவனும் மனைவியும் அன்புடன் இருப்பார்கள்.

நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117

Sunday, 12 July 2015

பாலாரிஷ்ட தோஷம்


வணக்கம் நண்பர்களே!

பொதுவாக மரணத்தை கொடுக்கும் கிரகங்கள் என்பவை ராகுவும் கேதுவும் ஆகும். ராகு கொடுக்கும் மரணம் எதிர்பாராமல் நடப்பது. கேதுவால் நிகழும் மரணம் தெரிந்தே ஏற்றுக் கொள்ளுவது. சமாதி நிலை என்பது கேதுவால் நிகழ்வது தான்.

ஆண்களுடைய ஜாதகத்தில் ஜீவகாரகன் குரு. அதே போல் பெண்கள் ஜாதகத்தில் ஜீவகாரகன் சுக்கிரன்.

ஆண் குழந்தையின் ஜாதகத்தில் குரு நீச்சம் அடைந்து எந்த ஒரு கிரகத்தின் பார்வையோ சேர்க்கையோ இல்லாமல் ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்து இருந்தால் அந்த ஜாதகம் பாலாரிஷ்ட தோஷம் உடையது.

அதே போல் பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் அடைந்து எந்த ஒரு கிரகத்தின் பார்வையோ சேர்க்கையோ இல்லாமல் ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்து இருந்தால் அந்த ஜாதகம் பாலாரிஷ்ட தோஷம் உடையது.

மேற்கண்ட தோஷம் உடைய ஜாதகர் வீட்டில் 7 வருடங்கள் தொடர்ந்து அவரின் பெற்றோகள் மிருத்யுஜ்ஜெய ஹோமம் செய்ய வேண்டும்.


அன்னதானம் செய்ய வேண்டும். ஏழைகளின் மருத்துவ செலவிற்கு உதவ வேண்டும். குலதெய்வத்திற்கு உரிய பூஜைகளை தவறாமல் செய்து வேண்டிக் கொண்டால் நலத்தே நடக்கும்.

நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117

இரவில் ஆற்றில் குளிக்கலாமா?


வணக்கம் நண்பர்களே!

இரவில் எழு மணிக்குமேல் ஆற்றிலோ குளத்திலோ இறங்கி குளிக்கக் கூடாது. ஏனென்றால் தீர்த்தங்கள் எல்லாம் அடங்குகின்ற நேரம் என்று உண்டு.

“மாசி தீர்த்தம்” என்ற ஒரு தேவதை உண்டு. அந்த தேவதைதான் தீர்த்தங்களைப் பாதுகாகின்றது. பொழுது சாய்ந்தவுடன் நதி தூங்குகின்றது என்று கதைகளில் வரும். நதி தூங்குமா? நிச்சயமாக தூங்கும்.

இரவு ஏழு மணிக்குமேல் ஆற்றிலோ குளத்திலோ குளித்தால் அது பாவம். சிரமங்கள் பல வந்து சேரும். 


நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117


Saturday, 11 July 2015

குழந்தை பிறப்பதில் பிரச்சினை யாருக்கு?


ஓம் 

வணக்கம் நண்பர்களே!

ஆண்களுடைய ஜாதகத்தில் விந்துவை குறிக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். மேலும் விந்துவில் உள்ள உயிர் அணுக்களை குறிக்கும் கிரகம் சூரியன் ஆகும். பெண்களுடைய ஜாதகத்தில் கருமுட்டையை குறிக்கும் கிரகம் இந்த சுக்கிரன் தான். எனவே ஆணோ பெண்ணோ சுக்கிரன் வலுவாக இருந்தால் கண்டிப்பாக குழந்தை உண்டு.

சுக்கிரனும் சூரியனும் ஒரே நட்சத்திர பாதத்தில் ஒரே ரசியில் இருந்தால் விந்துவில் உள்ள உயிர் அணுக்கள் இறந்துவிடும். ஏனென்றால் சூரியன் என்பது நெருப்பு கிரகம். விந்துவும் நெருப்பும் அருகே இருந்தால் விந்துவில் உள்ள உயிர் அணுக்கள் இறந்துவிடும்.

சுக்கிரனும் சந்திரனும் ஒரே நட்சத்திர பாதத்தில் ஒரே ராசியில் இருந்தால் விந்து நீர்த்து போகும். உயிரணுக்கள் மிகக் குறைவாக இருக்கும்.

பெண்களுடைய ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனும் ஒரே நட்சத்திர பாதத்தில் ஒரே ராசியில் இருந்தால் கருமுட்டை கருப்பையில் தங்காது. நீர் கிரகமாகிய சந்திரன் கர்பப்பையில் இருந்து கழிவினை வெளியேற்றிக் கொண்டே இருப்பார். இதுவே வெட்டை என்ற வெள்ளைப்படுத்தல் நோய் ஆகும்.

மேலும் சுக்கிரனுக்கோ, சூரியனுக்கு 1,5,9ல் அல்லது 2,6,1௦ல் ராகு இருந்தால் கர்பத்திலேயே கரு அழியும் அல்லது குழந்தை இறந்து பிறக்கும் அல்லது அற்ப ஆயுள் உள்ள குழந்தை பிறக்கும்.

மேலும் சுக்கிரனுக்கோ, சூரியனுக்கோ 1,5,9ல் அல்லது 2,6,1௦ல் கேது இருந்தால் கர்ப்பப்பை சிறியதாக இருக்கும் அல்லது அடைப்பு இருக்கும். எனவே குழந்தை பிறப்பதில் தடை ஏற்ப்படும்.

சூரியனுக்கு 1,5,9 ல் அல்லது 2,6,1௦ல் சனி கிரகம் இருந்தால் ஜாதகருக்கு முதுமையில் குழந்தை பிறக்கும். அல்லது தாமதமாக குழந்தை பிறக்கும். 

நன்றி நண்பர்களே!

SURESH
99946 90117

Thursday, 9 July 2015

தேஜஸ் உள்ள உடல் யாருக்கு?


வணக்கம் நண்பர்களே!

யாருக்கு குருவுடன் சந்திரன் சேர்ந்தோ அல்லது 2,5,9ம் பாவங்களிலோ தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகரின் உடலில் ஒருவித தேஜஸ் இருந்துகொண்டே இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்த தொடர்பு இருந்தால் அவர்களுடைய உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக்கொள்ள முடியும்.

நன்றி நண்பர்களே!

SURESH

99946 90117

யார் எழுத்து துறையில் சிறந்து விளங்குவார்கள்?


வணக்கம் நண்பர்களே!

எழுத்து துறையை குறிக்கக் கூடிய கிரகம் புதன். ஒருவருடைய ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் எழுத்துத் துறையில் சிறந்து விளங்கலாம். ஜாதகரை குறிக்கும் கிரகமாகிய குருவினுடனோ அல்லது குருவிற்கு 2,5,9ம் பாவங்களில் புதன் இருந்தால் ஜாதகர் எழுத்துத் துறையில் சிறந்து விளங்குவார்கள்.

மேலும் புதன் சனி நின்ற ராசியிலோ அல்லது சனி கிரகத்திற்கு 2,5,9ம் பாவங்களில் இருந்தால் ஜாதகர் எழுத்துத்துறையை தொழிலாகவே கொண்டு இருப்பார்.

நன்றி நண்பர்களே!
SURESH

99946 90117

சுக்கிரன் + சூரியன் இணைவு


ஓம் 

வணக்கம் நண்பர்களே!

சூரியன் சுக்கிரானுடன்  இணைந்து இருந்தாலோ அல்லது சுக்கிரனுக்கு 2,5,9ல் இருந்தாலோ கீழ்க்கண்ட பலன்களை ஜாதகர் பெறுவார். இங்கு சுக்கிரன் என்ற கிரகம் ஜாதகரின் மனைவியை குறிப்பது.

இந்த இணைவு கொண்ட ஜாதகரின் மனைவி அதிகார தோரணை கொண்ட நபராக இருப்பார். நல்லபடியாக குடும்பத்தை நடத்துபவராகவும், நிர்வாக திறமை கொண்டவராகவும் இருப்பார். இவரின் உடலில் அதிக சூடு இருக்கும். சற்று தான் என்ற அகம்பாவமும், கர்வமும் உடையவராக இருப்பார்.

நன்றி நண்பர்களே!

SURESH

99946 90117

வாய் கொப்பளிக்கும் முறை


ஓம்

வணக்கம் நண்பர்களே!

காலையில் பல் துலக்கும்போதும், உணவு உண்ட பின்னரும் நாம் வாய் கொப்பளிக்கின்றோம்(?). வாய் கொப்பளித்த தண்ணீரை எப்படி கீழே துப்பவேண்டும் என்று சாஸ்திரம் சொல்லுன்கின்றது. நாம் பொதுவாக செய்வது நேராக துப்புவோம் அல்லது வானத்தை நோக்கி துப்புவார்கள்.

வாயை கொப்பளித்த நீரை இடது கை பக்கமாகத் தான் துப்ப வேண்டும். வலது கை பக்கம் துப்பினால் பிதுர்களின் சாபம் வரும்.

நன்றி நண்பர்களே!

SURESH
99946 90117

ஆடையின்றிக் குளிக்கலாமா?


ஓம்

வணக்கம் நண்பர்களே!

யாராக இருந்தாலும் சரி, குளிக்கும்போது ஆடை இல்லாமல் குளிக்கக் கூடாது. ஆணோ, பெண்ணோ மேலாடை இல்லாமல் குளிக்கக் கூடாது. அப்படி குளித்தால் “தீர்த்த தோஷம்” வருகிறது. இந்த தோஷம் நம் உடலில் அலர்ஜி எனப்படும் நோயை ஏற்ப்படுத்தும்.

சிலபேருக்கு தண்ணீர் அலர்ஜி, இனிப்பு அலர்ஜி, ரசம் அலர்ஜி, தயிர் அலர்ஜி என்று பலவிதமான அலர்ஜி நோய்கள் வருகின்றன. ஒருவருக்கு ஒத்துவரும் விஷயம் மற்றவருக்கு எப்படி அலர்ஜியாக மாறுகின்றது? எல்லாம் நாம் செய்கின்ற தவறுகள்தான் இதற்கு முக்கிய காரணம்.

நன்றி நண்பர்களே!

SURESH
99946 90117



Tuesday, 7 July 2015

சுக்கிரன் + கேது இணைவு


சுக்கிரன் + கேது இணைவு

ஓம்

வணக்கம் நண்பர்களே!

கேது சுக்கிரானுடன் இணைந்து இருந்தாலோ அல்லது சுக்கிரனுக்கு 2,5,9ல் இருந்தாலோ கீழ்க்கண்ட பலன்களை ஜாதகர் பெறுவார். இங்கு சுக்கிரன் என்ற கிரகம் ஜாதகரின் மனைவியை குறிப்பது.

இந்த இணைவு கொண்ட ஜாதகரின் மனைவி விரக்தி மனப்பான்மையுடன் இருப்பார். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடையவராக இருப்பார். மனைவி அடிக்கடி நோய்வாய்ப்படுவார். மனைவியுடன் கருத்துவேடுபாடு அதிகம் இருக்கும். ஜாதகர் பெண்ணாக இருந்தால் கருப்பை மற்றும் மர்ம உறுப்புகளில் பிரச்சினை இருக்கும். ஜாதகருக்கு பொருளாதார தடைகள் அதிகம் இருக்கும்.


நன்றி நண்பர்களே!

SURESH

99946 90117

சுக்கிரன் + சனி இணைவு



ஓம்

வணக்கம் நண்பர்களே!

சனி சுக்கிரானுடன் இணைந்து இருந்தாலோ அல்லது சுக்கிரனுக்கு 2,5,9ல் இருந்தாலோ கீழ்க்கண்ட பலன்களை ஜாதகர் பெறுவார். இங்கு சுக்கிரன் என்ற கிரகம் ஜாதகரின் மனைவியை குறிப்பது.

ஜாதகர் அதிஷ்டசாலி. எல்லா சுகங்களும் வாழ்க்கையில் கிட்டும். திருமணதிற்கு பிறகு வசதி வாய்ப்புகள் பெருகும். ஜாதகரின் மனைவி மூலம் சொத்து மற்றும் பணம் கிடைக்கும். ஜாதகரின் மனைவி வேலைக்கு செல்பவராக இருப்பார். ஜாதகர் வட்டி தொழில் அல்லது பேங்க்கில் வேலை செய்யபவராக இருப்பார். அல்லது அழகு பொருட்கள், துணிக்கடை, ஆடம்பர பொருட்கள் விற்ப்பவராகவும், கலை துறையில் ஈடுபடுபவராகவும் இருப்பார்.

நன்றி நண்பர்களே!

SURESH
99946 90117

Monday, 6 July 2015

சுக்கிரன் + ராகு இணைவு



ஓம்

வணக்கம் நண்பர்களே!

ராகு சுக்கிரானுடன் இணைந்து இருந்தாலோ அல்லது சுக்கிரனுக்கு 2,5,9ல் இருந்தாலோ கீழ்க்கண்ட பலன்களை ஜாதகர் பெறுவார். இங்கு சுக்கிரன் என்ற கிரகம் ஜாதகரின் மனைவியை குறிப்பது.

இந்த இணைவு கொண்ட ஜாதகர் அழகான வீடு காட்டுவார். வண்டி வாகனங்கள் அமையும். ஜாதகரின் மனைவிக்கு அடிக்கடி உடல்நிலை சரி இல்லாமல் போகும். மனைவிக்கு ஆயுள் குறைவு. ஜாதகரின் மனைவி அதிகம் பொய் பேசுபவராகவும் இருப்பார்.

குறிப்பு: பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் ராகுவுடன் இணைந்து இருந்தால் இதே பலன்கள் ஜாதகியின் கணவருக்கு பொருந்தும்.

நன்றி நண்பர்களே!

SURESH

99946 90117

Sunday, 5 July 2015

முருக பக்தியில் உயர்நிலை பெற

ஓம்

வணக்கம் நண்பர்களே!

திருஅண்ணாமலையில் ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் மேலகோபுரம் அருகில் மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் ஸ்ரீஅருணகிரி நாதரின் ஜீவ சாமாதி அமைந்துள்ளது. மிகச் சிறியதாக காட்சியளித்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த சன்னதி ஆகும்.

முருகனை இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபாடுவோரும், முருக பக்தியில் உயர்நிலை அடைய விரும்புவோரும் ஸ்ரீஅருணகிரி நாதர் சூட்சமமாக அருள்புரியும் இச்சன்னதியை அடிப்பிரதட்சிணம் செய்து, திருப்புகழ் ஓதி, தினை மாவினால் ஆன உணவினை ஏழைகளுக்கு தானமாக அளித்துவர முருக பக்தியில் உன்னத நிலை அடையலாம்.

நன்றி நண்பர்களே!

SURESH

99946 90117

Friday, 3 July 2015

குரு + கேது இணைவு


குரு + கேது இணைவு 

ஓம்

வணக்கம் நண்பர்களே!

குரு கேது இணைந்து ஒரே ராசியில் இருந்தாலோ அல்லது குருவிற்கு கேது 2,5,9ல் இருந்தால், ஜாதகர் ஆன்மீக வழியில் செல்ல கொடுப்பினை உள்ளது. குரு என்பவர் ஜீவனை (உயிர்) குறிப்பவர். கேது முக்தியை கொடுப்பவர். ஒருவருடைய ஜாதகத்தில் மேற்கூறிய இணைவு குருவிற்கும் கேதுவிற்கும் இருந்தால் இதுவே கடைசி பிறப்பு. அதாவது மறுபிறப்பு இல்லை.

மேலும் மேற்கூறிய இணைவு உள்ள நபர் ஆன்மீகத்தில் ஈடுபட்டால் வெகு சுலபமாக ஆன்மீக இலக்கினை அடையமுடியும். முயற்சி செய்தால் அவருக்கு உரிய ஆன்மீக குரு எளிதாக கிடைப்பார்.

நன்றி நண்பர்களே!

SURESH
99946 90117

சுக்கிரன் + செவ்வாய் இணைவு



ஓம்

வணக்கம் நண்பர்களே!

செவ்வாய் சுக்கிரானுடன் இணைந்து இருந்தாலோ அல்லது சுக்கிரனுக்கு 2,5,9ல் இருந்தாலோ கீழ்க்கண்ட பலன்களை ஜாதகர் பெறுவார். இங்கு சுக்கிரன் என்ற கிரகம் ஜாதகரின் மனைவியை குறிப்பது.

இந்த இணைவு கொண்ட ஜாதகரின் மனைவி அதிக கோபம் கொண்டவராக இருப்பார். முன்கோபி. கணவனை அடக்கி ஆள விருப்பம் உடையவர். உடம்பில் அதிக உஷ்ணம் இருக்கும். அதிக தைரியம் மற்றும் சண்டைகளில் விருப்பம் உடையவராகவும் இருப்பார். தன்னுடைய கணவருடன் அதிக விவாதங்கள் செய்பவராகவும் இருப்பார்.

குறிப்பு: நாம் ஒருவருக்கு அமையும் மனைவியினை ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனை கொண்டு பார்க்கிறோம். இதே போல் பெண்ணின் ஜாதகத்தில் கணவனைக் குறிக்கும் கிரகம் செவ்வாய். அடுத்ததாக செவ்வாய் கொண்டுள்ள தொடர்புகளை கொண்டு ஒரு பெண்ணிற்கு அமையும் கணவனைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே!

SURESH

99946 90117

Thursday, 2 July 2015

சுக்கிரன் + புதன் இணைவு


ஓம்

வணக்கம் நண்பர்களே!

புதன் சுக்கிரானுடன்  இணைந்து இருந்தாலோ அல்லது சுக்கிரனுக்கு 2,5,9ல் இருந்தாலோ கீழ்க்கண்ட பலன்களை ஜாதகர் பெறுவார். இங்கு சுக்கிரன் என்ற கிரகம் ஜாதகரின் மனைவியை குறிப்பது.

இந்த இணைவு கொண்ட ஜாதகரின் மனைவி நல்ல கௌரவமான குடும்பத்தில் இருந்து வருவார். நல்ல அறிவு உடையவர். அதிஷ்டசாலி. படித்தவர். புதிய விசயங்களை ஆர்வமுடன் கற்றுக் கொள்ளுவார். நல்ல அழகாக இருப்பார். அமைதி மற்றும் புத்திக் கூர்மை உடையவர். தெய்வபக்தி உடையவர்.

நன்றி நண்பர்களே!

SURESH
99946 90117

மூலிகை தூபப் போடி


ஓம்

வணக்கம் நண்பர்களே!

மூலிகைப் பொடியை நாம் தூபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தினால் நல்ல பலன்களை பெற முடியும். மூலிகைப் பொடியை சிறிதளவு சாம்பிராணியில் சேர்த்து தூபம் இட வேண்டும். தூபம் இடுதல் என்பது காலப் போக்கில் குறைந்து வருகிறது. தூபத்திற்கு உரிய மூலிகைப் போடி எப்படி தயாரிப்பது என்பதனை கொடுத்து உள்ளேன். தேவைப் படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, பொன்னாங்கண்ணி, செம்பருத்தி, மருதாணி இவற்றை அளவோடு கலந்து அதனுடன் சிறிது வில்பம், துளசி சிறிது மஞ்சளும் சேர்த்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். நன்றாக உலர்ந்தவுடன் அதை பெண்மையான பொடியாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்தப் பொடியை பரப்பி, அதில் ஓம்காரத்தை (பிரணவம்) எழுதி பஞ்சாட்சர மந்திரத்தை 10,000 உருக்கள் ஜெபித்து அந்தப் பொடியை சாம்பிராணியில் கலந்து வீடுகளில் தூபம் போடலாம்.

நன்றி நண்பர்களே!

SURESH
99946 90117