Friday, 31 October 2014

கர்பிணிப் பெண்களுக்கு உரிய பூஜா முறை



வணக்கம் நண்பர்களே!

தினந்தோறும் கோயில்களில் இரவில் நடைபெறும் சிவபாத பூஜையில் கர்ப்பிணிப் பெண்கள் இறைநாமங்களையோ, தோத்திரங்களையோ ஜபித்தவாறே கலந்து கொள்வது நல்லது. அவ்வாறு பங்கேற்றுப் பின்னர் பசுவிற்கு வாழைப்பழம் போன்ற கனிகளைப் பிரசாதமாக அளித்து வந்தால், பிரசவம் நன்கு நடைபெறும். உத்தமக் குழந்தைகளைப் பெற்று எடுப்பர்.

மேலும் அவர்கள் கோயிலில் பள்ளியறை நைவேத்தியப் பாலைப் பலருடன் பகிர்ந்து இறைசிந்தனையுடன் அருந்தி வர, எவ்வித வலி உணர்வு இன்றிப்   பிரசவம் இனிது நடைபெறும்.
      
ஓம் ஸ்ரீகுருவே சரணம்!

நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்

  

Thursday, 30 October 2014

பூக்கள் பறிக்கும் – வாங்கும் முறை


வணக்கம் நண்பர்களே!

செடிகளில் இருந்து மலர்களைப் பறிக்கும்பொழுதும் மலர்களைத் தொடுக்கும் பொழுதும் “சாந்த்யை ஸ்ரீரிஷ்யசிருங்கர் பத்ன்யை நம:” என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.

கடைகளில் வாங்கும் பொழுதும், பூக்களை தலையில் சூடும் பொழுதும் இந்த மந்திரத்தைச் சொல்வது சிறப்பானது. பூக்களுக்கு உரித்தான இந்த எளிய மந்திரத்தைத் தவறாது ஜபித்து வருவது பெண்களின் சுமங்கலித்துவத்தைப் போற்றி பாதுகாக்க வழி செய்கிறது.    

ஓம் ஸ்ரீகுருவே சரணம்!

நன்றி நண்பர்களே!

Su.சுரேஷ்

இறைப் பிரசாதங்களைப் பெரும் முறை


வணக்கம் நண்பர்களே!

நாம் விபூதி, குங்குமம் போன்ற இறைப்பிரசாதங்களைப் வாங்கும் பொழுது நம்முடைய வலது கையில் வாங்குகிறோம். பின்னர் நம்முடைய இடது கைக்கு மாற்றி அதனை நெற்றியில் இட்டுக் கொள்கிறோம்.

இது தவறான பழக்கம் ஆகும். பிரசாதங்களை வாங்கும் பொழுது இடது கையை வலது கையின் கீழே வைத்து வலது கையில் வாங்கி வலது கை மோதிர விரலால் தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.  அதன் பின்பு இடது கைக்கு மாற்றிக் கொள்ளலாம். இதுவே மிகச் சரியான முறையாகும்.
  
ஓம் ஸ்ரீகுருவே சரணம்!

நன்றி நண்பர்களே!

Su.சுரேஷ்

Monday, 27 October 2014

குலதெய்வ வழிபாடு


வணக்கம் நண்பர்களே!

வாழ்க்கையில் நமக்கு எல்லா நலன்களையும் செல்வங்களையும் அளிக்க வல்லது குல தெய்வ வழிபாடு. பெரும்பாலோருக்கு அவர்களின்  குல தெய்வம் தொலைவில் உள்ள ஊர்களில் இருக்கும். இவர்கள் எவ்வாறு குல தெய்வத்தை வழிபட வேண்டும்?

அத்தகையோர் வருடம் ஒரு முறையாவது தங்கள் குல தெய்வத்தை நேரில் தரிசனம் செய்து, உரிய அபிஷேக ஆராதனைகளுடன், தான தர்மங்களுடன் வழிபட வேண்டும். பின்னர் தினமும் மாலையில் தங்கள் இல்லத்தில் விளக்கேற்றி வைத்துத் தங்கள் குலதெய்வத்தை மனதில் நினைத்து வழிபடுவதால் வருடம் முழுவதும் வழிபட்ட பலன் கிட்டும்.   

ஓம் ஸ்ரீகுருவே சரணம்!

நன்றி நண்பர்களே!

Su.சுரேஷ்



ஸ்ரீசெவ்வந்தி விநாயகரின் சிறப்பு



வணக்கம் நண்பர்களே!

திருச்சி மலைக்கோட்டையில்  அருள் புரியும் ஸ்ரீசெவ்வந்தி விநாயகர் மிகவும் தொன்மை வாய்ந்த அனுக்கிரக மூர்த்தி. செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர் மாலை இவருக்கு அணிவித்து வழிபட்டால் கணவன்மார்களுடைய கடுமையான நோய்கள் விலகும். சுமங்கலிப் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் செவ்வந்தி விநாயகர்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்!

நன்றி நண்பர்களே!

Su.சுரேஷ்

Sunday, 26 October 2014

ஆன்மீகத்தில் பச்சரிசி மாவு


வணக்கம் நண்பர்களே!

கோலம் போடுவதற்கு பச்சரிசி மாவையே பயன்படுத்த வேண்டும். சுண்ணாம்பு மாவால் கோலம் போடக் கூடாது. பச்சரிசி மாவால் கோலம் இட்டால் எறும்புகளும், பூச்சிகளும் உண்ணுகின்றன. ஆகவே தினந்தோறும் நம்மை அறியாமலேயே இறைவன் படைப்பில் உள்ள மற்ற ஜீவராசிகளுக்கும் உணவிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்கிறோம்.

அதேபோல வண்ணப் பொடிகளையும், பெயின்டையும் கோலமிடப் பயன்படுத்துவது தவறு. இது கண்ளுக்கு அழகாகத் தெரிந்தாலும், அது கோலம் இடுவருக்கு வருமையத்தான் தரும். கடன் தொல்லைகளும் அதிகருக்கும்.

மாறாக பச்சரிசி மாவல் கோலம் இட்டால் செல்வம் பெருகும். குடும்ப ஒற்றுமையும் வளரும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்!

நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்

astrovaasan@gmail.com 

Friday, 24 October 2014

ஆன்மீகத்தில் புறா


வணக்கம் நண்பர்களே!

புறாவிற்கு தன்னுடைய கூட்டில், அடுத்த வேளைக்கென எந்த ஒரு உணவினையும் சேகரித்து வைத்துக் கொள்ளும் பழக்கமே கிடையாதாம். பேராசை குணமே இல்லாத அதியற்புத ஜீவன் புறக் குலமாகும். கருப்பண்ண சுவாமியிடம்  உள்ள நாய்,குதிரை போன்ற பஞ்ச (ஐந்து) மிருகங்கள், பட்சிகளில் புறாவும் ஒன்றாகும்.

உத்தமனான சிபிச் சக்கரவர்த்தியின் தர்ம குணத்தைச் சோதிப்பதற்காய், அக்னி பகவான் புறா வடிவைத்தானே தேர்ந்தெடுத்தார். ஆனால் தன் பக்தனாம் சிபியின் சதையை அக்னி பகவான் அரிந்து துன்புருத்தியதாய், தர்ம தேவதையின் வருத்தத்தினாலும், தர்மதீபமாம் சிபியைச் சோதித்த காரணத்தால் அக்னி மூர்த்திக்கு ஒரு சாபம் ஏற்ப்பட்டது. இதனால் அக்னி மூர்த்திக்குப் புறா வடிவில் இருந்து மீண்டு, தன் சுயவடிவை அடைய முடியாமல் போனது.

இருந்தாலும் புறா வடிவில் இருக்கும் பொழுது அக்னி மூர்த்தி, ஆசை அற்ற அருங்குணம் தன்னுள் ஒளிர்ந்து மிளிர்வதை உணர்ந்தார். புறக் குளத்தின் மேன்மையையும், ற்றற்ற அருங்குணத்தையும் போற்றினார். பின்பு தன்னுடைய அலகால் பூமியை தோண்டி அதில் காசித் தீர்த்தத்தை வரவழைத்து அலகில் தாங்கி சிவலிங்கத்தை அபிஷேகித்துத் தன் சுய வடிவைப் பெற்றார். தேவாரப் பாடல் பெற்ற இத்தலமே, திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் சிவபூமி, மாயூரம் சீர்காழி அருகே உள்ளது திருக்குருகாவூர்.

தான் புறா வடிவில் வாழ்ந்தமையால் அண்டங்காக்கை போல் பிதுர் லோகங்களுக்குச் சென்று வரும் யோக சக்தியையும் தெய்வங்களுக்கு வாகனமாகும் பேற்றையும் அக்னி மூர்த்தி புறக் குலத்திற்கு வரமாகத் தந்த புனிதத் தலம் துரவிக்காடு ஆகும்.

தினமும் புறாவிற்கு உணவிட்டு வந்தால் வாழ்வில் திருப்தி, மன அமைதி, ஆசையற்ற அருங்குணம் கிடைக்கும். பிறரிடம் பொறாமை உண்டாகாது. மேலும் புறக் குளத்தின் பற்றற்ற தர்மகுண சாங்கியத்தால் உஞ்சவ்ருத்தி தர்மபட்சி என்றும் போற்றப்படுகிறது.

நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்

Thursday, 23 October 2014

பங்குச்சந்தையும் ஜாதக அமைப்பும் – பாகம் 13 – நிறைவு பகுதி


வணக்கம் நண்பர்களே!

முந்தய பதிவில் 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 11ம் பாவத்தை தொடர்பு கொண்ட நபர்கள் தொழில் முறையாக செய்யாமல் பங்குசந்தை ஆலோசகராக செயல்பட்டால் வெற்றி மற்றும் பொருளாதார உயர்வு கிடைக்கும் என்று பார்த்தோம்.

சார ஜோதிட முறையில் ஷேர்மார்க்கெட்டில் ஈடுபட்டு வருபவர்களின் ஜாதகத்தில் 5ம் பாவம் 12ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் பொருளாதார ரீதியாக சாதகமா? பாதகமா? அல்லது ஷேர்மார்க்கெட்டில் எப்படி ஈடுபடவேண்டும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

5ம் பாவம் தன்னுடைய நட்சத்திர உப நட்சத்திர தொடர்பின் மூலம் 12ம் பாவத்தினை தொடர்பு கொள்வது ஷேர்மார்க்கெட் தொழில் செய்பவர்களுக்கு பாதகமான அமைப்பை தரும். ஏனென்றால் 12 ம் பாவ தொடர்பு 5ம் பாவத்திற்கு 8ம் பாவமாக வரும். எனவே லக்னம் என்ற ஜாதகருக்கு இந்த தொடர்பினால் பிரச்சினைகளே அதிகம் வரும்.

லக்னபாவம் என்பது ஜாதகருடைய தனித்தன்மையை, சுய அறிவினை வெளிப்படுத்துவது ஆகும். ஆனால் இந்த 12ம் பாவத்தொடர்பு ஜாதகரின் சிந்திக்கும் திறனை, தனித்தன்மையை இந்த பாவ ரீதியல் இழப்பதை குறிக்கும்.

இவரால் எந்த ஒரு முடிவையும் சுயமாக எடுக்க முடியாது. எனவே இந்த துறையில் ஈடுபடும் ஜாதகரால் வெற்றி பெற முடியாது. ஒருவேளை ஜாதகரின் லக்ன பாவம் 7,11 பாவ தொடர்புகள் பெற்று இருந்தால் 5ம் பாவத்தின் 12ம் பாவ தொடர்பு ரீதயாக வரும் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

எனவே இந்த 12ம் பாவ தொடர்பு ஜாதகருக்கு பாதகமானது. இந்த துறையில் ஈடுபடாமல் இருப்பதே சிறப்பு.       


நன்றி நண்பர்களே!
Su. Suresh
astrivaasan@gmail.com




பங்குச்சந்தையும் ஜாதக அமைப்பும் – பாகம் 12


வணக்கம் நண்பர்களே!

முந்தய பதிவில் 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 10ம் பாவத்தை தொடர்பு கொண்ட நபர்களுக்கு லக்னம் மற்றும் தசா புத்திகள் அதிகம் ஒத்துழைத்தல் இந்த துறையில் முழு நேரமாக ஈடுபட வாய்ப்புகள் அதிகம் உண்டு என்று பார்த்தோம்

சார ஜோதிட முறையில் ஷேர்மார்க்கெட்டில் ஈடுபட்டு வருபவர்களின் ஜாதகத்தில் 5ம் பாவம் 11ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் பொருளாதார ரீதியாக சாதகமா? பாதகமா? அல்லது ஷேர்மார்க்கெட்டில் எப்படி ஈடுபடவேண்டும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

5ம் பாவம் தன்னுடைய நட்சத்திர உப நட்சத்திர தொடர்பின் மூலம் 11ம் பாவத்தினை தொடர்பு கொள்வது ஷேர்மார்க்கெட் தொழில் செய்பவர்களுக்கு ஒரு மத்திமமான அமைப்மை தரும். இந்த தொடர்பானது 5ம் பாவத்திற்கு புறம் சார்ந்த விசயங்களுக்கு ஒரு நடுநிலையான அமைப்பை கொடுக்கும். அதாவது பெரிய அளவிற்கு வருமானத்தை தராது.

ஆனால் அகம் சார்ந்த விசயங்களுக்கு பெரிய வெற்றியை தரும். அதாவது 5ம் பாவத்தில் உள்ள ஆலோசனை கூறுதல் என்ற காரகம் சிறப்பை தரும் ஜாதகருக்கு. மேலும் இந்த 11ம் பாவத் தொடர்பு 7ம் பாவத்திற்கு (வாடிக்கையாளர்களுக்கு) 5ம் பாவமாக வரும். எனவே ஜாதகர் இந்த தொழிலில் பங்கு சந்தை ஆலோசகராக செயல் பட்டால் வாடிக்கையாளர்களுக்கு வெற்றி மற்றும் ஜாதகருக்கு திருப்தி கிடைக்கும்.

மேலும் 11ம் பாவம் லக்னம், 5ம் பாவம் மற்றும் 9ம் பாவத்திற்கு(வாக்கு பலிதம்) போன்றவற்றிக்கு சாதகமாகவும் 2ம் பாவம்,11ம் பாவம் ஆகியவற்றிக்கு மத்திமமாகவும் உள்ளது. எனவே 5ம் பாவம் 11ம் பாவத்தை தொடர்புகொண்டு இருக்கும் ஜாதகர் தொழில் முறையாக செய்யாமல் ஆலோசகராக செயல்பட்டால் வெற்றி மற்றும் பொருளாதார உயர்வு  கிடைக்கும்.


நன்றி நண்பர்களே!
Su. Suresh
astrovaasan@gmail.com

Monday, 20 October 2014

பங்குச்சந்தையும் ஜாதக அமைப்பும் – பாகம் 11


வணக்கம் நண்பர்களே!

முந்தய பதிவில் 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 9ம் பாவத்தை தொடர்பு கொண்ட நபர்கள் இந்த துறையில் தின வர்த்தக முறையில் ஈடுபடாமல் இருப்பதே சிறப்பு என்று பார்த்தோம்.

சார ஜோதிட முறையில் ஷேர்மார்க்கெட்டில் ஈடுபட்டு வருபவர்களின் ஜாதகத்தில் 5ம் பாவம் 10ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் பொருளாதார ரீதியாக சாதகமா? பாதகமா? அல்லது ஷேர்மார்க்கெட்டில் எப்படி ஈடுபடவேண்டும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

5ம் பாவம் தன்னுடைய நட்சத்திர உப நட்சத்திர தொடர்பின் மூலம் 10ம் பாவத்தினை தொடர்பு கொள்வது 5ம் பாவத்திற்கு ஒரு சாதகமான அமைப்பாக இருக்கும். இவர் அடிக்கடி வர்த்தகம் செய்ய மாட்டார். 10ம் பாவ தொடர்பு கொண்ட நபர்கள் நீண்ட கால முதலீட்டிலேயே அதிகம் கவனம் செலுத்துவார்கள்.

அப்படியே தின வர்த்தகத்தில் ஈடுபட்டாலும் சரியான நேரத்தில் உள்ளே சென்று சரியான நேரத்தில் வெளியே வந்து விடுவார்கள். 10ம் பாவ தொடர்பு 2ம் பாவத்திற்கு சாதகமாக உள்ளதால் இந்த துறையிலேயே முழு நேரமாக பனியாற்றி  தன்னுடைய பொருளாதார நிலையை நன்கு உயர்த்திக் கொள்வார்.

இவர் கொடுக்கும் பரிந்துரைகள் மற்றும் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருப்பதால் இவர்கள் அதிக வாடிக்கையாளர்களை பெற்று விடுவார்கள். ஆனால் 5ம் பாவம் 10ம் பாவத்துடன் 8ம் பாவத் தொடர்பினையும் பெற்று இருந்தால் ஜாதகர் தன்னுடைய அந்தஸ்து மற்றும் பதவியின் மூலம் தன்னுடைய வாடிக்கையாளர்களை ஏமாற்றுவார்.

மேலும் 10 பாவ தொடர்பு கொண்ட ஜாதகர் இந்த துறை சார்ந்த நிறுவனங்களில் மிகப்பெரிய பதவியில் அமர வாய்ப்புகள் அதிகம் உண்டு. 

5ம் பாவம் 10ம் பாவத்தினை தொடர்பு கொண்ட நபர்கள் லக்னம் மற்றும் தசா புத்திகள் அதிகம் ஒத்துழைத்தல் இந்த துறையில் முழு நேரமாக ஈடுபட வாய்ப்புகள் அதிகம் உண்டு.

நன்றி நண்பர்களே!

Su. Suresh   

பங்குச்சந்தையும் ஜாதக அமைப்பும் – பாகம் 10


வணக்கம் நண்பர்களே!

முந்தய பதிவில் 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 8ம் பாவத்தை தொடர்பு கொள்வது ஒரு கெடுதலான அமைப்பு என்றும் இந்த அமைப்பினை உடைய ஜாதகர் 5ம் பாவ ரீதியான தொழில்களை செய்தால்  அதிக இழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று பார்த்தோம்.

சார ஜோதிட முறையில் ஷேர்மார்க்கெட்டில் ஈடுபட்டு வருபவர்களின் ஜாதகத்தில் 5ம் பாவம் 9ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் அதனால் ஏற்ப்படும் விளைவுகள் பொருளாதார ரீதியாக சாதகமா? பாதகமா? அல்லது ஷேர்மார்க்கெட்டில் எப்படி ஈடுபடவேண்டும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

5ம் பாவம் தன்னுடைய நட்சத்திர உப நட்சத்திர தொடர்பின் மூலம் 9ம் பாவத்தினை தொடர்பு கொள்வது 5ம் பாவத்திற்கு ஒரு சாதகமான அமைப்பாக இருந்தாலும் தொழில் ஸ்தானமாகிய 10 பாவத்திற்கு 12ம் பாவமாக வருவதால் ஷேர் மார்க்கெட் துறையில் நீடித்து தொழில் செய்ய முடியாது.

இந்த தொடர்பு உள்ளவர்கள் ஷேர் மார்க்கெட் துறையில் ஆர்வலர்களாக இருப்பார்கள். இந்த துறையை ஆராய்ச்சி நோக்கில் அணுகுவார்கள். தன்னுடைய ஆராய்ச்சி முடிவுகளை எந்தவித பொருளாதார நோக்கமும் இல்லாமல் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் திறமையினை பெற்றவர்.

இவர்கள் இந்த துறையில் ஆன்மீகத்தினையும் ஈடுபடுத்துவார்கள். ஜோதிடம் மற்றும் ஆன்மீகத்தினை அதிகம் நம்புவார்கள். அவற்றை ஷேர் மார்க்கெட்டில்  பயன் படுத்துவார்கள். அவர்களுக்கு அதிக நண்பர்கள் இந்த துறையில் இருப்பார்கள். அவர்கள் மத்தியல் இவருக்கு நல்ல புகழ் இருக்கும் இந்த துறையில்.

5ம் பாவம் 9ம் பாவத்தினை தொடர்பு கொண்ட நபர்கள் இந்த துறையில் தின வர்த்தக முறையில் ஈடுபடாமல் இருப்பதே சிறப்பு.

நன்றி நண்பர்களே!

Su. Suresh   
astrovaasan@gmail.com

Sunday, 19 October 2014

பங்குச்சந்தையும் ஜாதக அமைப்பும் – பாகம் 9



வணக்கம் நண்பர்களே!

முந்தய பதிவில் 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 7ம் பாவத்தை தொடர்பு கொள்வது சாதகமானது என்றும் இந்த ஷேர்மார்க்கெட் தொழிலை தொழிலாகவே நீடித்து செய்ய இயலும் மற்றும் நல்ல வருமானமும் உண்டு என்று பார்த்தோம்.

சார ஜோதிட முறையில் ஷேர்மார்க்கெட்டில் ஈடுபட்டு வருபவர்களின் ஜாதகத்தில் 5ம் பாவம் 8ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் அதனால் ஏற்ப்படும் விளைவுகள் பொருளாதார ரீதியாக சாதகமா? பாதகமா? அல்லது ஷேர்மார்க்கெட்டில் எப்படி ஈடுபடவேண்டும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

5ம் பாவம் தன்னுடைய நட்சத்திர உப நட்சத்திர தொடர்பின் மூலம் 8ம் பாவத்தினை தொடர்பு கொள்வது ஒரு கெடுதலான அமைப்பாகும். இந்த அமைப்பினை உடைய ஜாதகர் 5ம் பாவ ரீதியாக தொழில்களை செய்தால் அதிக இழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும். இந்த தொடர்பு 70% அளவிற்கு சாதகமாக இல்லை.

9ம் பாவத்திற்கு 8ம் பாவமானது 12ம் பாவமாக வருவதால் 5 பாவ ரீதியான செயல்களுக்கு தெய்வ அனுக்ரகம் கிடைக்காது. எனவே இழப்புகள் தான் மிச்சமாக இருக்கும். ஒருவேளை 5ம் பாவம் 2 மற்றும் 8ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தாலோ அல்லது லக்ன பாவம் 3,7,11ம் பாவங்களை வலுவுடன் தொடர்பு கொண்டு இருந்தால் 8ம் பாவத்தொடர்பினால் வரும் பிரச்சினைகள் ஒரு அளவிற்கு கட்டுக்குள் இருக்கும்.

ஆனால் ஜாதகருக்கு 5ம் பாவம் 8ம் பாவத்தினை மட்டும் தொடர்பு கொண்டு இருந்தால் தன்னை இந்த தொழிலில் நிலை நிறுத்திக் கொள்ள குறுக்கு வழிகளை தேர்ந்தெடுத்து அதர்மமான முறையில் செயல் படுவார். ஆனால் எந்த வழியில் முயற்சி செய்தாலும் தோல்வி மற்றும் அசிங்கங்களையே ஜாதகர் பெறுவார்.

மேலும் இவருடன் தொடர்பில் உள்ள நபர்கள் ஷேர் மார்க்கெட் தொழிலில் தோல்வி அடைந்தவர்கலாகவே இருப்பார்கள். பொதுவாகவே இவரால் சந்தையின் போக்கினை கவனிப்பதோ, அனுமானிப்பதோ வராது.

இவருடைய பெரும்பாலான வர்த்தகங்களை மார்க்கெட் செல்லும் எதிர் திசையில் சென்று செய்து நஷ்டத்தினை பெறுவார்.

எனவே 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 8ம் பாவ தொடர்பு கொண்ட நபர்கள், அவர்களுடைய லக்னம் மற்றும் தசா புத்திகள் சாதகம் இல்லாத பட்சத்தில் இந்த துறையை விட்டு வெளியே சென்று தங்களுடைய ஜாதகத்தினை நன்றாக ஆராய்ந்து தங்களுக்கு எந்த தொழிலில் வருமானம் வரும் என்பதனை அறிந்து கொண்டு அதனை செய்து வெற்றி பெற முயற்சி செய்வது சிறப்பு.

நன்றி நண்பர்களே!

Su. Suresh   
astrovaasan@gmail.com

பங்குச்சந்தையும் ஜாதக அமைப்பும் – பாகம் 8


வணக்கம் நண்பர்களே!

முந்தய பதிவில் 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 6ம் பாவத்தை தொடர்பு கொள்வது சாதகமானது இன்றும் இந்த ஷேர்மார்க்கெட் தொழிலை தொழிலாகவே நீடித்து செய்ய இயலும் மற்றும் நல்ல வருமானமும் உண்டு என்று பார்த்தோம்.

சார ஜோதிட முறையில் ஷேர்மார்க்கெட்டில் ஈடுபட்டு வருபவர்களின் ஜாதகத்தில் 5ம் பாவம் 7ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் அதனால் ஏற்ப்படும் விளைவுகள் பொருளாதார ரீதியாக சாதகமா? பாதகமா? அல்லது ஷேர்மார்க்கெட்டில் எப்படி ஈடுபடவேண்டும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

ஜாதகருக்கு 5ம் பாவம்  7ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருப்பது சிறப்பான அமைப்பு ஆகும். மேலும் இந்த தொடர்பு நல்ல வருமானத்தினை இதில் ஈடுபடுவர்களுக்கு தரும். மேலும் 7ம் பாவம் 2,6,10ம் பாவங்களுக்கு சாதகமான பாவம் ஆதலால் இந்த தொழில் ஈடுபடும் ஜாதகர் நீண்ட நாட்களுக்கு வர்த்தகம் செய்ய விதி கொடுப்பினை உள்ளது.

7ம் பாவம் என்பது பொதுஜன தொடர்பு மற்றும் மக்கள் கூட்டத்தையும் குறிப்பதால் இவரை சுற்றி கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த 7ம் பாவ தொடர்பு வாடிக்கையாளர்களுக்கு அதிக சாதகமாக இருக்கும். இவர் தன்னிடத்தில் உதவி வேண்டுபவர்களுக்கு குறைவான சேவைக்கட்டணம் வாங்குவார்.

7ம் பாவ தொடர்பு கொண்ட ஜாதகர், மற்றவருக்கு ஆலோசனைகள் கூறுவதன் மூலம் பிரச்சினைகள், தொழில் நெருக்கடி போன்றவற்றில் சிக்கிக்கொள்ள மாட்டார். இவர் தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் எப்பொழுதுமே இன்முகத்துடன் பழகுவார். 5ம் பாவத்தின் 7ம் பாவதொடர்பு ஜாதகருக்கு இந்த தொழில் மூலம் சமூக அந்தஸ்து கிடைக்கச்செய்யும்

ஜாதகர் தன்னுடைய அனைத்து வாடிக்கையாளர்களிடமும் சரிசமாக பழகுவார். அவர்களை ஏமாற்றவோ, கைவிடவோ மாட்டார். எனவே இந்த 5ம் பாவத்தின் 7ம் பாவத் தொடர்பு ஷேர்மார்க்கெட் தொழிலை செய்வதற்கு நல்லதொரு அமைப்பை கொடுக்கும்.

நன்றி நண்பர்களே!
Su. Suresh
astrovaasan@gmail.com