ஓம் குருவே சரணம்!
வணக்கம் நண்பர்களே!
தினமும் ஏதேனும் ஒரு நல்ல காரியத்தை செய்ய வேண்டும் என்ற வைராக்யத்தை நாம்
ஏற்படுத்திக் கொண்டு, நம்முடைய வரும்கால சந்ததியினருக்கும் அதனை கற்று கொடுக்க
வேண்டியது நம்முடைய கடமையாகும். தானத்திலேயே சிறந்த தானமாகிய அன்ன தானத்தை
தினந்தோறும் ஒருவருக்காவது செய்ய வேண்டிய பழக்கத்தை நாம் இளமையில் இருந்து பழக்கப்படுத்திக்
கொள்ள வேண்டும். கோவிலில் இருக்கும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்குவது
மிகச்சிறப்பததாகும்.
அன்னதானம் கீழ்க்கண்ட நாட்களில் குறிப்பிட்டுள்ள கோவில்களில்
வழங்கப்பட்டால் மிகச்சிறப்பான பலன்களை பெறலாம்.
ஞயிற்று – சிவன் கோவில்
திங்கள் – அம்மன் கோவில்
செவ்வாய் – முருகன் கோவில்
புதன் – பெருமாள் கோவில்
வியாழன் – விநாயகர் கோவில்
வெள்ளி – எல்லை அம்மன் கோவில்
சனி – இராமர் கோவில்
மேற்கண்ட அன்னதான முறை மாமனார்,மாமியார் மற்றும் உறவினர்களுடன் பகை
ஏற்ப்பட்டு துன்பம் அனுபவிப்பர்களுக்கு அதனில் இருந்து விடுபட நல்லதொரு பரிகாரமாக
அமைகிறது.
குறிப்பு: நாம் கொடுக்கின்ற அன்னதானத்தை பெறுகின்றவர்கள் நம்முடன்
பூர்வ ஜென்மத்தில் தொடர்பில் இருந்தவர்கள். இந்த அன்னதானத்தின் மூலமாக பூர்வ ஜென்ம
கர்ம வினைகள் தீர்கின்றன. நாம் இன்று செய்கின்ற ஒவ்வொரு செயலும் பூர்வ
ஜென்மத்துடன் தொடர்புடையது என்பதனை அறிந்து இறைவனை நினைத்து இறை அடியார்களுக்கு
நம்மால் முடிந்த உதவிகளை செய்வது சிறப்பு.
நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்
No comments:
Post a Comment