Monday, 27 October 2014

குலதெய்வ வழிபாடு


வணக்கம் நண்பர்களே!

வாழ்க்கையில் நமக்கு எல்லா நலன்களையும் செல்வங்களையும் அளிக்க வல்லது குல தெய்வ வழிபாடு. பெரும்பாலோருக்கு அவர்களின்  குல தெய்வம் தொலைவில் உள்ள ஊர்களில் இருக்கும். இவர்கள் எவ்வாறு குல தெய்வத்தை வழிபட வேண்டும்?

அத்தகையோர் வருடம் ஒரு முறையாவது தங்கள் குல தெய்வத்தை நேரில் தரிசனம் செய்து, உரிய அபிஷேக ஆராதனைகளுடன், தான தர்மங்களுடன் வழிபட வேண்டும். பின்னர் தினமும் மாலையில் தங்கள் இல்லத்தில் விளக்கேற்றி வைத்துத் தங்கள் குலதெய்வத்தை மனதில் நினைத்து வழிபடுவதால் வருடம் முழுவதும் வழிபட்ட பலன் கிட்டும்.   

ஓம் ஸ்ரீகுருவே சரணம்!

நன்றி நண்பர்களே!

Su.சுரேஷ்



No comments:

Post a Comment