Tuesday, 25 November 2014

ஆன்மீகத்தில் கிழக்குத் திசை – பாகம் 2


வணக்கம் நண்பர்களே!

கிழக்குத் திக்கில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள்

1.       கிழக்குத் திக்கில் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் மதியம் 12 மணிக்குள் செய்தால் நல்ல பலன்கள் கிட்டும்
2.       ஆடைகள் அணியும் பொழுதும், பட்டன் போடும் பொழுதும் கிழக்கு திக்கு பார்த்து அணிய வேண்டும்
3.       முடிச்சு போடும் எந்த ஒரு காரியத்தையும் கிழக்கு திக்கை பார்த்தே செய்ய வேண்டும்.
4.       நோய்களுக்கான மருந்துகளைச் சாப்பிடும் பொழுது செவ்வாய் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சாப்பிடுவதே சிறப்பு. அவ்வாறு சாப்பிடும் பொழுது கிழக்குத் திக்கு பார்த்து தான் சாப்பிட வேண்டும்.
5.       ஆண்கள் புதன், சனிக்கிழமைகளிலும், பெண்கள் செய்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் கிழக்கு நோக்கி நின்று எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்தது.
6.       இவ்வாறு கிழக்குத் திக்கில் நாம் செய்கின்ற காரியங்கள் அனைத்திற்கும் உண்மை பேசும் பாலகராய் இருந்கின்ற பவன் ஆசி  அளிக்கின்றார்.

நன்றி நண்பர்களே!

SU.Suresh

ஆன்மீகத்தில் கிழக்குத் திசை – பாகம் 1


வணக்கம் நண்பர்களே!

கிழக்குத் திக்கில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள்

1.       நாம் அமருகின்ற இருக்கைகளை கிழக்கு திசை பார்த்து அமைத்துக் கொள்ள வேண்டும்.
2.       மஞ்சள் நிறம் உடைய அனைத்துப் பொருட்களையும் கிழக்குத் திக்கில் தான் வைக்க வேண்டும். உதாரணமாக, தங்க நகைகள், மாங்கல்ய  சரடு, மஞ்சள் மற்றும் மஞ்சள் வஸ்திரம் போன்றவை.
3.       இவை தவிர கண்ணாடி, பேனா,பென்சில் போன்றவைகளையும் கிழக்குத் திக்கில் தான் வைக்க வேண்டும்.
4.       நகைகளை அணியும் பொழுது கிழக்குத் திக்கு பார்த்து நின்றுகொண்டு தான் அணிய வேண்டும்.
5.       அனைத்துவிதமான ஒப்பந்தங்களில் கையொப்பம் இடும் பொழுதும் கிழக்குத் திக்கு பார்த்து நின்று தான் இட வேண்டும்.
6.       அலுவலகத்தில் வருகைப் பதிவில் கையொப்பம் இடும் பொழுதும் அதனை கிழக்குத் திக்கில் வைத்து தான் இட வேண்டும். இதன் மூலம் அலுவலகத்தில் தேவை இல்லாமல் வரும் பிரச்சினைகள் வராது.

நன்றி நண்பர்களே!

SU.Suresh

Monday, 24 November 2014

ஜாதகமும் தொழில் அமைப்பும் – பாகம் 6


வணக்கம் நண்பர்களே!

10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 4ம் பாவத்தினை தொடர்பு கொள்வது ஜாதகருக்கு சாதகமான அமைப்பினை தரும். இந்த 4ம் பாவ தொடர்பு 2ம் பாவத்திற்கு 3ம் பாவமாக வரும். இதனால் ஜாதகர் செய்கின்ற தொழில் மூலம் அதிக வருமானம் வருவதைக் காட்டுகிறது.

4ம் பாவமானது லக்ன பாவத்திற்கு 4ம் பாவமாகவே வருவதால் ஜாதகரின் தனித் தன்மை என்பது 70% வரை இல்லாமல் போய் விடுகிறது. எனவே ஜாதகர் பணம் ஒன்றே குறிகோளாக தன்னுடைய தனித்திறமையை வெளிப்படுத்தாமல் தொழிலில் ஈடுபடுவார்.

4ம் பாவம் என்பது நிலையாக இருத்தலை குறிக்கும். எனவே ஜாதகரும் தான் செய்கின்ற தொழிலில் நிலையாக மாற்றங்கள் இல்லாமல் ஒரே மாதிரியான  தொழிலை செய்வததை குறிக்கும்.

தொழில் ஸ்தானத்தை கெடுக்கக் கூடியது 5 மற்றும் 9 ம் பாவங்கள் ஆகும். அந்த பாவங்களையே கெடுக்கக் கூடியது இந்த 4ம் பாவம். எனவே தொழிலுக்கு இந்த 4ம் பாவத் தொடர்பு ஒரு சிறந்த அமைப்பாகவே கருதலாம்.

நன்றி நண்பர்களே!

Su.Suresh

ஜாதகமும் தொழில் அமைப்பும் – பாகம் 5



வணக்கம் நண்பர்களே!

10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 3ம் பாவத்தினை தொடர்பு கொள்வது ஜாதகருக்கு மத்திமமான அமைப்பினை தரும். 10ம் பாவத்திற்கு 3ம் பாவம் 6ம் பாவமாக வரும். இந்த தொடர்பானது  போட்டிகள் இல்லாமல் தொழில் செய்தலையும் சற்று போராடி தொழில் செய்வதையும் குறிப்பிடும்.

இந்த தொடர்பானது, ஜாதகர் தான் செய்கின்ற தொழிலில் அவருடைய  தனித்தன்மையை வெளிப்படுத்துவதற்கு வழிவகுக்கும். இந்த 3ம் பாவம் 2ம் பாவத்திற்கு 2ம் பாவமாக வரும். எனவே ஜாதகர் சராசரி அளவிற்கு சற்று கூடுதலாக மட்டுமே தொழில் மூலம் பணம் கிடைக்கும்.

மேலும் 4ம் பாவம் என்பது ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும். அதற்க்கு 12ம் பாவமாக வரும் 3ம் பாவம் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளுவதை குறிக்கும்.

எனவே இந்த 10ம் பாவத்தின் 3ம் பாவத்தொடர்பு தொழில் செய்யும் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி கொள்வதையும், தொழிலுக்காக அடிக்கடி பயணங்களை செய்வது அல்லது அடிக்கடி தொழிலை மாற்றிக் கொள்வதைக் குறிக்கும்.  

நன்றி நண்பர்களே!

Su.Suresh

Friday, 21 November 2014

கேட்டை நட்சத்திரப் பெண்களுக்கு


வணக்கம் நண்பர்களே!

கேட்டை நட்சத்திரம் உடைய பெண்கள் திருமணத்  தடங்கல்களினால் வருந்திடில் வெள்ளை நிறப் பூக்களால் இந்திரனை அர்ச்சித்து ஏதேனும் மலை மேல் உள்ள ஒரு நாகப் புற்றுக்குப் பால் வார்த்து மருதாணி இட்ட கால்களுடன் 21 முறையேனும் அடிப்பிரதட்சணம் செய்து வர நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

கேட்டை நட்சத்திரத்தன்று இந்த வழிபாட்டை செய்வது மிகவும் விசேஷமாகும்

நன்றி நண்பர்களே!

Su.சுரேஷ் 



கால்நடைகள் மற்றும் வாகனங்கள் வாங்குவோர்க்கு


வணக்கம் நண்பர்களே!

புதிதாக வாகனங்கள் மற்றும் பசு, எருமை, ஆடு போன்றவை வாங்க விரும்புவர்கள் மிருகசீரிஷ நட்சத்திர நாளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்நாளில் சிவபெருமானை முருங்கைப் பூவினால் அர்ச்சித்து
அப்பூக்களைப் பிரசாதாகப் பெற்றுச் சென்றால் நல்ல வாகனங்கள் மற்றும் கால்நடைகள் அமையும்.

நன்றி நண்பர்களே!

Su.சுரேஷ் 

எம பயம் நீங்க...


வணக்கம் நண்பர்களே!

ஒவ்வொரு மாதமும் வரும் மக நட்சத்திரத்தன்று  எருமை மாடுகளுக்கு உணவு படைப்பது மிகவும் விசேசம். அதிலும் குறிப்பாக அகஸ்திய முனிவரிடம் ஆசி பெற்ற அகத்திக் கீரையை மக நட்சத்திரத்தன்று  எம தர்மராஜரின் வாகனமான எருமை மாடுகளுக்குக் கொடுத்து முறையாக வணங்கி வந்தால் எம(மரண) பயம் நீங்கும். இறந்தவுடன் ஜோதியாக சிவலோகம் அடையும் நல்வழி கிட்டும்.

வளர்பிறை நாட்களில் வரும் மக நட்சத்திரத்தன்று எருமை மாடுகளுக்கு கீழ்க்கண்ட முறையில் உணவிடுவதன் மூலம் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

ஞாயிறு – பரங்கி பத்தை
திங்கள் – முளைக் கீரை
செவ்வாய் – சிவப்புத் தண்டுக் கீரை
புதன் – முருங்கைக் கீரை
வியாழன் – பொன்னாங்கண்ணிக் கீரை
வெள்ளி – பசலைக் கீரை
சனி – நச்சுக் கோட்டை கீரை

நன்றி நண்பர்களே!
Su. Suresh  

Wednesday, 19 November 2014

ஜாதகமும் தொழில் அமைப்பும் – பாகம் 4


வணக்கம் நண்பர்களே!

10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 2ம் பாவத்தினை தொடர்பு கொள்வது ஜாதகருக்கு சிறப்பான அமைப்பினை தரும். ஏனென்றால் இந்த 2ம் பாவம் 10ம் பாவத்தின் திரிகோண பாவமாகும்.

10ம் பாவம் 2ம் பாவத்தினை தொடர்பு கொள்வதனால் தொழில் மூலம் நல்ல வருமானம் வரும். எனவே ஜாதகர் செய்யும் தொழிலை நீடித்து செய்ய முடியும்.

2ம் பாவம் 1ம் பாவத்திற்கு சாதகமாக உள்ளபடியால் ஜாதகர் தொழில் மூலம் தன்னை பெரிதும் வருத்திக்கொள்ள மாட்டார். மேலும் ஜாதகர் தான் பார்க்கும் தொழிலை அடிக்கடி மாற்றவும் மாட்டார். மேலும் தொழிலுக்காக அதிகம் போராட மாட்டார்.

மேலும் இந்த தொடர்பானது சிறப்படைய சார ஜோதிட முறையில் சில விதிகள் உள்ளன. அவை.

10ம் பாவ உப நட்சத்திரம் 5 மற்றும் 9ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருக்க கூடாது.

லக்ன பாவம் 5,9ம் பாவங்களுடன் தொடர்பு இருக்க கூடாது.

நன்றி நண்பர்களே!

Su.Suresh

Tuesday, 18 November 2014

ஜாதகமும் தொழில் அமைப்பும் – பாகம் 3



வணக்கம் நண்பர்களே!

10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 1ம் பாவத்தினை தொடர்பு கொள்வது சிறப்பான அமைப்பு கிடையாது.

ஏனென்றால் 10ம் பாவத்தினை எதிர்க்கக் கூடிய அல்லது செயல்படாமல் செய்யக் கூடிய பாவங்கள் 1,5,9 ஆகும். இவை 10ம் பாவத்திற்கு 4,8,12 என்ற அமைப்பினை தரும். எனவே 1ம் பாவ தொடர்பு சிறப்பு இல்லை.

சார ஜோதிட விதிப்படி 1ம் பாவத்தொடர்பு 10ம் பாவத்திற்கு 4ம் பாவமாக வரும். இந்த தொடர்பு தொழில் அமைப்பிற்கு 30% மட்டுமே நன்மையை பயக்கும். 70% தீமையை தரும்.

1ம் பாவம் என்பது ஜாதகருக்கு கௌரவத்தை மட்டுமே தொழில் மூலம் கொடுக்கும். மேலும் இந்த தொடர்பு தன ஸ்தானமாகிய 2ம் பாவத்திற்கும் பாதகமாக உள்ளது.

எனவே ஜாதகருக்கு பெரிய அளவில் வருமானம் தொழில் மூலம் இருக்காது. ஆனால் கெளரவம் இருக்கும். மேலும் ஜாதகர் தன்னிடம் உள்ள பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுத்து விடுவார்.

ஆனால் 10ம் பாவம் 1ம் பாவத்துடன் மட்டும் அல்லாமல் 3,7,11 பாவங்களுடனும் தொடர்பு கொண்டு இருந்தால் அது சிறப்பான அமைப்பை தரும்.

நன்றி நண்பர்களே!

Su.Suresh

Sunday, 16 November 2014

ஜாதகமும் தொழில் அமைப்பும் – பாகம் 2



வணக்கம் நண்பர்களே!

இந்த பதிவில் 10ம் பாவத்தின் பொதுவான காரகத்துவங்களைப் பார்ப்போம். சார ஜோதிட முறையில் கணிக்கப்பட்ட ஒரு ஜாதகத்தில் 10ம் பாவ ஆரம்பமுனையைக் கொண்டு ஜாதகரின் தொழிலுக்கான கொடுப்பினையை தெரிந்து கொள்ள முடியும்.

அந்த தொழிலின் மூலம் மதிப்பு, அதிகாரம், உயர் பதவி, பதவி உயர்வு, பொறுப்பான பதவி, தலைமை பதவி, கெளரவம் மற்றும் மரியாதை ஜாதகருக்கு கிடைக்குமா என்பதை காட்டுவது 10ம் பாவம் ஆகும்.

மேலும் புறம் சார்ந்த அனைத்து காரியங்களிலும் வெற்றி, நிர்வாகத் திறன் தொழில் சாதனையாளர்கள், குழுவிற்கு தலைமை தாங்குதல், சாதனை புரிதல் மற்றும் எளிதில் திருப்தி அடையாத குணம் போன்ற காரங்கன்களை 10ம் பாவம் கொண்டுள்ளது.

இந்த 10ம் பாவம் உலகத்தில் உள்ள அனைத்து தொழில்களையும், ஜாதகரின் முதல் தொழிலையும் தெரிவிப்பது ஆகும். மேலும் வைத்தியர், கட்டளை இடுபவர்கள், நீதிபதி, அரசாங்கம் ,தொடைப்பகுதி, தேவைக்கு அதிகமாக    உற்பத்தி செய்தல் போன்ற காரகங்களை கொண்டுள்ளது.

10ம் பாவம் தனக்கு கொடுக்கப்பட்ட செயலை கவனமுடன், பொறுப்புடன், அக்கறையுடன் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வினை 10ம் பாவம் குறிக்கும்.

நன்றி நண்பர்களே!
Su.Suresh

Friday, 14 November 2014

மேல், கீழ், சமநோக்கு நாள்


வணக்கம் நண்பர்களே!

பஞ்சாங்கத்தில் மேல் நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று குறிப்பிட்டு இருக்கும்.

மேல்நோக்கு நாட்களில் பூமிக்கு மேல் செய்யப்படும் கூரை போடுதல் போன்ற காரியங்களை செய்யலாம்.

கீழ்நோக்கு நாட்களில் அஸ்திவாரம், கிணறு தோண்டுதல் போன்றவற்றையும், சமநோக்கு நாட்களில் தானியங்களை காய வைத்தல் போன்ற பணிகளையும் நிகழ்த்திட இவற்றில் எந்தவித தடங்களும் ஏற்படாது.

ஸ்ரீபூமாதேவியை வழிபட்டுக் குறித்த தான தர்மங்களுடன் இவற்றை நிறைவேற்றிடில் பல துன்பங்களைத் தவிர்த்திடலாம்.

நன்றி நண்பர்களே!

Su.சுரேஷ் 

குழந்தைகளுக்கு தூபம் இடுதல்


வணக்கம் நண்பர்களே!

பச்சிளம் குழந்தை நன்றாகத் தாய்ப்பால் அருந்த குழந்தையின் முதல் மாதத்தில் தினமும் காலை மாலையில் பால் குடிப்பதற்கு முன் குழந்தைக்கு சாம்பிராணி தூபப் புகையைக் காட்ட வேண்டும்.

இதனால் குழந்தைகளுக்கு ஏற்ப்படும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கி, தாய்மார்களுக்கும் பால் கட்டுதல் போன்ற துன்பமும் ஏற்ப்படாது.

தினமும் குழந்தையைப் பலரும் வந்து பார்த்து தூக்கி, கொஞ்சி சென்ற பின்னரும் குழந்தைக்கு சாம்பிராணி தூபம் காட்டி திருஷ்டி கழிக்க வேண்டும். இதனால் குழந்தைக்கு மந்தம், முறுக்கி அழுதல் போன்றவை தீரும்

நன்றி நண்பர்களே!

Su.சுரேஷ் 

Thursday, 13 November 2014

பங்கு சந்தை ஜாதகருக்கு வெற்றியா தோல்வியா?



வணக்கம் நண்பர்களே!

ஷேர் மார்க்கெட்டில் முழு நேரமும் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. அதற்கு ஜாதகருக்கு கொடுப்பினை வேண்டும்.

பொதுவாக எந்த ஒரு தொழில் செய்தாலும் அதற்க்கு முன்அனுபவம் வேண்டும். ஆனால் ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடுவதற்கு பணம் இருந்தால் போதும். யாரோ ஒருவரிடம் பணத்தைக் கொடுத்து டிப்ஸ் வாங்கிவிடலாம்.

ஜாதகக் கொடுப்பினை இல்லை என்றால் அவரிடம் பணத்தைக் கட்டி டிப்ஸ் வாங்கினாலும் உங்களுக்கு தோல்விகளே வரும். பொதுவாக கமிசன் ரீதியான தொழிலுக்கு ஜாதகரின் 5ம் பாவத்தை ஆராய வேண்டும். 5ம் பாவம் கெட்டு இருந்தால் கீழ்க்கண்ட வகையில் அவர் பணத்தை இழக்க நேரிடும்.  


·         பரிந்துரை செய்யப்பட்ட விலையை விட அதிக விலைக்கு வங்க நேரிடும்.
·         பயத்தினால் குறைவான லாபத்திற்கு வெளியில் வந்துவிடுவது,
·         ஆப்சன் வர்த்தகத்தில் ஈடுபட்டு பணத்தை இழப்பது
·         வாங்கிய பங்கை நஷ்டத்தில் விற்றவுடன் அடுத்த நிமிடத்தில் இருந்து பங்கின் விலை ஏறும்.
·         எந்த துறை ஜாதகருக்கு ஒத்து வராதோ அதிலேயே தொடர்ந்து ஈடுபடுவார். உதாரணமாக வெள்ளியில் வர்த்தகம் ஜாதகருக்கு சரிவராது என்றால் அதனை விடாமல் செய்து விட்டதை பிடிக்கிறேன் என்று நஷ்டப்படுவார்.  
·         பொறுமை இருக்காது.
·         கையில் உள்ள பணத்தினை அழித்தவுடன் புதிது புதிதாக வர்த்தகம் செய்ய வழிகள் தோன்றும்.
·         அடுத்து ரூ50000 இருந்தால் போதும், மாதம் ரூ100000 சம்பாதிக்கலாம் என்று கூறும் டிப்ஸ் கொடுப்பவரின் அனுபவம் கிடைக்கும்.
·         அவரும் செய்து காட்டுவார். அடுத்த மாதம் நீங்கள் கடன் வாங்கி இதில் ஈடுபடும் பொழுது அவரும் நஷ்டத்தினை கொடுப்பார்.
·         நீங்களும் வேறு வேறு தவறுகளை செய்து இனிமேல் இந்த தொழில் வேண்டாம் என்று முடிவு எடுப்பீர்கள்.
·         ஆனால் மனம் மீண்டும் மீண்டும்???     

நண்பர்களே உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஜாதகத்தில் 5ம் பாவம் ஷேர் மார்க்கெட் தொழிலை குறிப்பது. பொதுவாக இந்த 5ம் பாவம் என்பது தொழில் ஸ்தானமாகிய 10ம் பாவத்திற்கு மிகவும் பாதகமான பாவம் ஆகும்.

ஆகவே இந்த 5ம் பாவ ரீதியாக தொழில் செய்து சம்பாதித்து ஒரு சமூக அங்கீகாரம் கிடைக்கும் என்பது பெரிய கேள்விக்குறி. முடியவே முடியாது என்று சொல்ல வில்லை. கண்டிப்பாக அதற்கு கொடுப்பினை வேண்டும்.

ஷேர் மார்க்கெட் தொழில் ஈடுபட்டு இதுவரை நஷ்டப்பட்டு கொண்டே  இருபவர்களும், இனிமேல் புதிதாக இதில் ஈடுபடுபவர்களும் தங்களுடைய ஜாதகத்தினை ஆராய்ந்து இந்த துறையில் ஈடுபாடுகள் அல்லது தொடர்ந்து செல்லுங்கள்.  ஏனென்றால் நீங்கள் உழைத்து சம்பாதித்த பணம், அல்லது கடன் வாங்கி ஈடுபட வேண்டி இருந்தால் அது உழைத்து அடைக்க வேண்டிய பணம். எனவே முடியுமா அல்லது முடியாத என்று தெரிந்து கொண்டு ஈடுபடுங்கள்

எத்தனையோ நபர்கள் இந்த ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்து கொண்டே இருகின்றார்கள். உங்களை நம்பி குடும்பம் உள்ளது. நினைவில் கொள்ளவும்.

ஜோதிட ஆலோசனை பெற விரும்புவர்களுக்கு நான் சார ஜோதிட முறையில்  உங்களுடைய ஜாதகத்தினை கணித்து கீழ்க்கண்ட பலன்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

·         நீங்கள் ஷேர்மார்க்கெட் தொழில் செய்ய கொடுப்பினை எப்படி உள்ளது?
·         நடைபெறும் தசா புத்திகள் ஒத்துழைப்பு உள்ளதா இல்லையா?
·         அடுத்து வரும் தசா ஒத்துழைப்பு தருமா?
·         உங்களுக்கு தொடர்ந்து நஷ்டங்கள் வந்து கொண்டு இருந்தால், இந்த நிலை மாறுமா அல்லது இதுதான் தொடர்ந்து நடைபெறுமா?
·         உங்கள் ஜாதகத்தின் படி உங்களுக்கு தின வர்த்தகம் சிறப்பா அல்லது முதலீடு சிறப்பா? என்பதை பற்றிய ஆய்வு
·         உங்கள் ஜாதகத்தின் படி உங்களுக்கு பொருள் வணிகம் (Commodity) சிறப்பா?
·         உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற செக்டார்ஸ் (Sectors)  என்ன என்ன?

விருப்பம் உடையவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்

நன்றி!
Su.சுரேஷ்
9952127002



ஜாதகமும் தொழில் அமைப்பும் – பாகம் 1


வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் 1,3,5,7,9,11 பாவங்கள் அகம் சார்ந்த விசயங்களை ஆராய்வதற்கும் 2,4,6,8,10,12 பாவங்கள் புறம் சார்ந்த (பொருளாதார) விசயங்களை ஆராய்வதற்கும் பயன் படுத்துகிறோம் என்று முந்தய பதிவுகளில் பார்த்தோம்.

சார ஜோதிட விதிப்படி ஒரு குறிப்பிட்ட பாவத்தின் 9ம் பாவம் அந்த குறிப்பிட்ட பாவத்தினை எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் ஜாதகர் அனுபவிப்பதை குறிக்கும். எனவே 2ம் பாவத்திற்கு 9ம் பாவமான 10ம் பாவத்தினை தொடர்பு கொள்வது 2ம் பாவத்திற்கு சிறப்பான அமைப்பினை தரும் எனலாம்.

ஒருவருக்கு நன்றாக தொழில் அமைந்தாலே அவருக்கு பொருளாதரத்தில் எந்த வித பிரச்சினைகளும் வராது. எனவே ஒருவருக்கு 10ம் பாவம் வலுவாக இருந்து 2ம் பாவம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட அவர் செய்யும் தொழில் மூலம் வருமானம் வரும்.

ஒருவருக்கு தனம் பல வழிகளில் வந்தாலும் அவருக்கு தொழில் மூலம்
வரும் வருமானமே சிறப்பினை,மதிப்பினை தரும். கர்ம திரிகோனங்கள் என்பவை 2,6,10ம் பாவங்கள் ஆகும். இதில் 10ம் பாவமே வலிமையானது ஆகும். இந்த 10ம் பாவத்தினை கெடுக்கக் கூடியவை 5,9ம் பாவங்கள் ஆகும்.

ஒருவர் தொடர்ந்து கேளிக்கை மற்றும் சிற்றின்ப போகங்களிலேயே திளைத்து இருந்தால் அவரால் தன்னுடைய தொழிலை சரியாக கவனிக்க முடியாது.

இனிவரும் பதிவுகளில் 10ம் பாவத்தின் காரகத்துவங்கள் மற்றும் 1 முதல் 12 பாவங்களும் 10 பாவத்துடன் தொடர்பு கொள்வதால் உண்டாகும் விளைவுகளை பார்ப்போம்.

நன்றி நண்பர்களே!

Su.Suresh

Monday, 10 November 2014

ஜாதகரின் தோற்றம் – செவ்வாய்


வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் லக்னத்தின் உப நட்சத்திரமாக எந்த கிரகம் அமைகிறதோ அதனுடைய காரகத்திற்கு ஏற்றவாறு ஜாதகரின் தோற்றத்தை நிர்ணயம் செய்யலாம். இந்த பதிவில் லக்ன பாவ உப நட்சத்திரமாக செவ்வாய் அமையும் பொழுது ஜாதகரின் தோற்றம் எவ்வாறு அமையும் என்று பார்ப்போம்.

முரட்டுத்தனமான தோற்றம்
உடலில் வெப்பம் அதிகம் இருக்கும்
எதையும் துணிந்து செயல்படுத்தும் வேகம்
ஒழுக்கம் இல்லாமலும் சற்று எதையும் வெறித்தனத்துடன் அணுகும் தோற்றம்
தசைகள் வலிமையானதாகவும், முரட்டு ரோமங்கள் கொண்டவராகவும் இருப்பார்.
சிவந்த கண்கள்,பருத்த உடல் மற்றும் போஜன பிரியராகவும் இருப்பார்.

நன்றி நண்பர்களே!

SU.சுரேஷ்

சூன்ய திதிகள்


வணக்கம் நண்பர்களே!
               
ஒவ்வொரு ராசிக்கும் சில தகாத சூன்ய திதிகள் உண்டு. பொதுவாக அனைவரும் அவர் அவருக்கு உண்டான சூன்ய திதி நாட்களில் திருமணம்/புதுமனை புகுதல், வியாபார துவக்கம் போன்ற நல்ல காரியங்களை செய்யாக் கூடாது.

ஆனால் இந்த நாட்களில் கோயில் வழிபாடு, பூஜை போன்ற இறை வழிபாடுகளைத் தாராளமாக செய்யாலாம்.

இங்கு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் உண்டான சூன்ய திதிகளை கொடுத்துள்ளேன்.

மேஷம் சஷ்டி
ரிஷபம் சதுர்த்தி,திரயோதசி
மிதுனம் பஞ்சமி,அஷ்டமி,சதுர்த்தசி 
கடகம் சப்தமி
சிம்மம் திருதியை, சஷ்டி, நவமி,திரையோதசி
கன்னி பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி 
துலாம் பிரதமை, துவாதசி
விருச்சிகம் தசமி
தனுசு துவிதியை, சப்தமி, எகாதசி, சதுர்த்தசி
மகரம் பிரதமை, திருதியை, துவாதசி
கும்பம் சதுர்த்தி
மீனம் துவிதியை, எகாதசி, சதுர்த்தசி

சூன்ய திதி நாட்களில் முடிந்தவர்கள் கூட்டாக விஷ்ணு சகஸ்ரநாமம், கால பைரவர் துதி, அபிராமி அந்தாதி, கந்த சஷ்டி கவசம் போன்றவற்றைப் பாராயாணம் செய்தால் சூன்ய திதிகளின் தீய விளைவுகளைத் தணிக்கலாம்.
   
நன்றி நண்பர்களே!

Su.சுரேஷ்