Tuesday, 30 December 2014

தொழிலில் பிரச்சினை யாருக்கு?


தொழிலில் பிரச்சினை யாருக்கு?
சார ஜோதிட முறையில் 1௦ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 6,8,12 பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகருக்கு தன்னுடன் வேலை செய்யும் நபர்களாளோ அல்லது தனக்கு கீழ் வேலை செய்யும் நபர்களாளோ பிரச்சினைகள் வரும்.
மேலும் தசா புத்திகள் 6,8,12 பாவங்களை தொடர்பு கொண்டு நடக்கும் காலத்திலும் இந்த பிரச்சினைகள் உண்டு. மேலும் ஜாதகர் தொழில் ரீதியாக அதிக பிரச்சினைகள் சந்திப்பார்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH

வயதான தோற்றம்


நண்பர்களுக்கு வணக்கம்!

     யாருக்கு லக்ன பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 6,8,12 தொடர்பு பெறுகின்றதோ அவர்கள் சிறிய வயதிலேயே வயதான தோற்றத்தினை அடைந்து விடுவார்கள்.

     ஆனால் லக்ன பாவம் 1,5,9 அல்லது 3,7,11 பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் வயதானாலும் இளமையுடன் இருப்பார்கள்.

நன்றி நண்பர்களே!


SURESH

Saturday, 27 December 2014

சார ஜோதிட வகுப்புகள்





வணக்கம் நண்பர்களே!

கோவையில் குறுகிய காலத்தில் சார ஜோதிட முறையில் ஜோதிட பலன் சொல்லும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றான. ஜோதிடம் கற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.

பயிற்சி 1 – அடிப்படை சார ஜோதிட பயிற்சி

பயிற்சி காலம் – 3 நாட்கள் அல்லது 20 மணி நேரம். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் 3 மணி நேர பயிற்சி வகுப்புகள் நடை பெறுகின்றன. 7 ஞாயிற்று கிழமைகள் கலந்து கொள்ளலாம். அல்லது தொடர்ச்சியாக 3 நாட்கள் கலந்து கொள்ளலாம். இதற்கான பாட திட்டம்.

1.       ஜோதிட அடிப்படை
2.       கிரக காரகங்கள்
3.       அகம் சார்ந்த மற்றும் புறம் சார்ந்த காரகங்கள்
4.       உப நட்சத்திரம்
5.       பாவ தொடர்பு
6.       ஒரு பாவம் மற்ற பாவங்களுக்கு தரும் விளைவுகள்
7.       சார ஜோதிட அடிப்படை விதகள்
8.       சார ஜோதிட முறையில் சந்திரன்
9.       ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு எப்படி அந்த கேள்விக்குரிய கொடுப்பினையை கீழ்க்கண்ட முறையில் எப்படி ஆய்வு செய்வது என்பதனை எளிமையான முறையில் பயிற்றுவிக்கப்படும். 
a.       ஆய்வுக்குரிய பாவ காரக கொடுப்பினை
b.      ஆய்வுக்குரிய கிரக காரக கொடுப்பினை
c.       ஆய்வுக்குரிய பாவத்திற்கு லக்ன கொடுப்பினை
d.      ஆய்வுக்குரிய பாவத்திற்கு 9ம் பாவ கொடுப்பினை
e.      ஆய்வுக்குரிய பாவத்திற்கு தற்பொழுது உள்ள தசா புத்திகளின் கொடுப்பினை
10.   உதாரண ஜாதகங்கள் ஆய்வு

இந்த பயிற்சி வகுப்பு முடிவில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு கண்டிப்பாக உங்களால் பதில் சொல்ல முடியும்.

1.       ஜாதகரின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?
2.       ஜாதகரின் என்ன அலைகள் எதன் ரீதியில் இருக்கும்?
3.       ஜாதகர் கவுரவமான நிலையில் இருப்பரா?
4.       ஜாதகர் பிறந்த ஊரிலேயே வசிப்பரா?
 5.       ஜாதகரின் தன நிலை எப்படி இருக்கும்?
6.       ஜாதகருக்கு கண் நோய் உண்டா?
7.       ஜாதகர் மற்றவரிடம் பணிபுரிவரா அல்லது சொந்த தொழில் செய்வாரா? 8.       ஜாதகருக்கு அரசாங்க உத்தியோகம் உண்டா? அல்லது அரசாங்கம் மூலம் ஏதாவது பண வரவு உண்டா?
9.       ஜாதகருக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
10.   ஜாதகருக்கு குழந்தை பாக்கியத்திற்க்கான கொடுப்பினை எப்படி உள்ளது? 11.   எதிரிகளால் ஜாதகருக்கு தொல்லை உண்டா?
 12.   நண்பர்களால் ஜாதகருக்கு தொல்லை உண்டா?
13.   ஜாதகருக்கு காதல் தோல்வி மற்றும் காதல் மூலம் அசிங்க அவமானம் உண்டா?
14.   ஜாதகரின் கல்வி நிலை எப்படி உள்ளது?
 15.   ஜாதகருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் உண்டா?
16.   ஜாதகருக்கு கமிசன் அல்லது உடல் உழைப்பு இல்லாத வருமானம் உண்டா?
 17.   ஜாதகருக்கு கடன் தொல்லை உண்டா? எப்போது கடன் அடைக்க முடியும்?
18.   ஜாதகர் எந்த துறையில் சிறந்து விளங்குவார்?
19.   ஜாதகருக்கு வீடு, மனை,வாகனம் யோகம் எப்படி உள்ளது?
 20.   ஜாதகரின் மனைவி வேலைக்கு போவரா?
21.   ஜாதகருக்கு எதிர்பாரத விபத்து தொல்லைகள் வருமா?

பாட திட்டம் – 2 – உயர்நிலை சார ஜோதிட பயிற்சி

பயிற்சி காலம் – 15 மணி நேரம்.  ஒவ்வொரு ஞாயிறு அன்றும் 3 மணி நேர பயிற்சி வகுப்புகள் நடை பெறுகின்றன. 5 ஞாயிற்று கிழமைகள் கலந்து கொள்ளலாம்.


1.       சார ஜோதிட மென்பொருள் பயன்படுத்தும் விதம்
2.       பிறந்த நேரத்தினை சரி செய்வது
3.       திருமண பொருத்தம்
4.       படிப்பு,திருமணம், தொழில் நிர்ணயம் செய்தல்
5.       ஒவ்வொரு பாவத்தினையும் பல கோணங்களில் ஆய்வு செய்வது எப்படி?
6.       உதாரண ஜாதகங்கள்
7.       இறுதியாக அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் சார்பாக வைக்கப்படும் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு நமது குருநாதர் ஜோதிட நல்லாசிரியர் திரு A. தேவராஜ் அவர்களின் மூலம் “ஜோதிஷ ஆதித்யா” என்ற பட்டம் வழங்கப்படும்.  


மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

SURESH99946901179952127002










கால் ஆட்டலாமா?



வணக்கம் நண்பர்களே!

     உட்கார்ந்த அல்லது படுத்த நிலையில் கால்களை ஆட்டக் கூடாது. வலது காலை ஆட்டுவதால் மூட்டு சம்மந்தமான நோய்களும், இடது காலை ஆட்டுவதால் வாயு சம்மந்தமான பிடிப்புகளும் ஏற்படும்.

ஓம் குருவே சரணம்.

நன்றி நண்பர்களே!
SURESH


குழந்தைகளின் உச்சரிப்பு தெளிவாக


வணக்கம் நண்பர்களே!

     சில குழந்தைகளுக்குப் பேசும் பொழுது வார்த்தைகளைத் தெளிவாக உச்சரிப்பதில் சிரமம் இருக்கும். இக்குறையை நிவர்த்தி செய்ய தாய்மார்கள் ஒவ்வொரு கிருத்திகை நட்சதிரதன்றும் அகத்திக் கீரை பிசைந்த உணவினைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வர வேண்டும். இறை நம்பிக்கையுடன் தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் குழந்தைகளின் பேச்சு நாளடைவில் தெளிவாக அமையும்.   

ஓம் குருவே சரணம்.

நன்றி நண்பர்களே!

SURESH

பேச்சு திறமை வளர




வணக்கம் நண்பர்களே!

     காலையிலும் இரவிலும் மட்டுமே பல் துலக்குதல் வேண்டும் என்பது இல்லை. காரியங்கள் நன்கு சுபமாய் முடிய வெளியே செல்லுமுன் வலது மேற்புறம் தொடக்கி பல் துலக்கிச் சென்றால் “வாக்கு சாதுர்யம்” ஏற்படும். “லலாடங்கக் கஷாயம்” எனப்படும் (ஆலங்குச்சிகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டப்படும்) புனித நீரால் வாய் கொப்புளித்துச் சென்றிடில் வாக்கு சுத்தி ஏற்ப்படும்.
     குழந்தைகளுக்கு இதனை பழக்கி வந்தால் அவர்கள் பொய் பேச மாட்டார்கள். வாக்கு வன்மையும் ஏற்படும். ஜோதிடர்கள் இதைச் செய்து வந்திடில் குறிப்பாக ஜோதிடம் சொல்லும் முன் செய்திடில் சொற்பலிதம் ஏற்படும். ஆள் சமித்துக்களைக் கொண்டஹோமம், ஜோதிடர்களுக்கு வாக்கு பலிதத்தைத் தரும்.  

ஓம் குருவே சரணம்.

நன்றி நண்பர்களே!

SURESH

பூ வேண்டுமா?


வணக்கம் நண்பர்களே!

     பூ விற்போர் “பூ வாங்கி கொள்ளுங்கள்” என்று கூறினால் “பூ வேண்டாம்” என்று சொல்லாதீர்கள். “பூ இருக்கிறது அல்லது வாங்கியாயிற்று” என்று சொல்லுங்கள். ஏனென்றால் எப்பொழுதும் பூக்களைச் சுற்றி பரிஹார தேவதைகள் இருக்கும். “பூ வேண்டாம்” எனில் அவைகளை உதாசீனம் செய்ததாகி விடும்.

ஓம் குருவே சரணம்.

நன்றி நண்பர்களே!

SURESH

Thursday, 25 December 2014

ஒற்றைக் காதில் கடுக்கன் அணியாதீர்


வணக்கம் நண்பர்களே!
     எக்காரணம் கொண்டும் ஒற்றைக் காது கடுக்கண் கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு காதிலும்

சதுர் மண்டல நரம்பு
விகிர்ப்பத் தரண நரம்பு
சூர்ய மண்டல நரம்பு
சுகபந்து மண்டல நரம்பு

ஆகிய நரம்பு மண்டலங்கள் உள்ளன. இவை இரு காதுகளிலும் முறையாக இயங்கினால்தான் உடலின் சரிசமநிலை உண்டாகும். ஒற்றைக் காதில் மட்டும் கடுக்கனை அணிந்திடில் ஒரு காதில் உள்ள நான்கு நரம்பு மண்டலச் சுரப்பிகள் அதிவிரைவாகச் செயல்பட, தேக சரிசமநிலை பாதிக்கப்பட்டு மயக்கம், இரத்த அழுத்த மாறுதல்கள், மறதி, மனோ நிலை பாதிப்பபடுதல் போன்றவை உண்டாகும். எனவே Fashion என்று நினைத்துக் கொண்டு ஒற்றைக் காதில் கடுக்கனை அணிய வேண்டாம்.     
  
ஓம் குருவே சரணம்.

நன்றி நண்பர்களே!

SURESH

கால் மாறிய செருப்பு


வணக்கம் நண்பர்களே!

     வெளியில் அவசரமாகச் செல்கையில் சில சமயங்களில் வலது, இடது செருப்புக்களை கால் மாற்றி அணிந்து கொள்வதுண்டு. இதனால் செல்லும் காரியம் தடைபடும். பல பிரச்சினைகள் உருவாகும் என்பதை அறிந்துடுக! அந்த சமயத்தில் பொறுமையுடன் எதையும் செய்யவும். செல்லும் காரியத்தை அந்த தருணத்தில் தவிர்த்தல் உத்தமம்.
    
ஓம் குருவே சரணம்.

நன்றி நண்பர்களே!

SURESH

வெளிநாட்டு பயணம் வெற்றியுடன் நிறைவேற


வணக்கம் நண்பர்களே!

பெருமாளுக்கு உகந்த நட்சத்திரம் திருஓணம். ஒவ்வொரு திருஓண நட்சதிரத்தன்றும் பவளமல்லிப் பூவினால் மாலை கட்டி பெருமாளுக்குச் சார்த்தி வழிபட்டு வந்தால் வெளிநாட்டுப் பயணம், கடல் கடந்த பயணம் போன்றவை வெற்றியுடன் நிறைவேறும். புதிதாக நிலம் வங்க எண்ணுபவர்களும் மேற்குறித்த வழிபாட்டை முறையாகச் செய்து வர, நல்ல முறையில் நிலம் வங்க வழி ஏற்படும்.
   
ஓம் குருவே சரணம்.

நன்றி நண்பர்களே!

SURESH

தீய சக்திகளை விரட்ட




வணக்கம் நண்பர்களே!

     பெண்கள் தம் வீட்டு வாசற்படியைத் தூய்மையான அரைத்த மஞ்சளைக் கொண்டு தான் மெழுக வேண்டும். இதனால் தீய ஆவி, துர்தேவதை, பில்லி சூன்ய துர்சக்திகள் போன்றவை வீடிற்குள் நுழையாமல் தடுக்கப்படுகின்றன. மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசிநியாகும். மேலும் வாசற்படிக்கு சிலர் மஞ்சள் பெயிண்ட் அடித்து விடுகின்றார். அதனால் எந்தவித பிரயோஜனமும் இல்லை.
  
ஓம் குருவே சரணம்.

நன்றி நண்பர்களே!
SURESH


ஸ்ரீ கோடீஸ்வரர்


வணக்கம் நண்பர்களே!

     கும்பகோணம் அருகே கொட்டையூரில் ஸ்ரீகோடீஸ்வரராக சிவபெருமான் அருள்பாலிக்கின்றார். எவ்வித மந்திரமும், பூஜையும், பிரதோச வழிபாடும், ஜபமும் இங்கு கோடி மடங்காய்ப் பெருகிவிடும். சூட்சுமமாய் கோடி லிங்கங்கள் இருக்கின்ற லிங்கம்!. ஆகவே தரிசிக்கும் போது ஏற்படுகின்ற எத்தகைய எண்ணங்களும் கோடியாய்ப் பெருகும்!

ஓம் குருவே சரணம்.

நன்றி நண்பர்களே!

SURESH

எலுமிச்சை நறுக்கும் முறை


வணக்கம் நண்பர்களே!

                “தேவ கனிகள்” என போற்றப்படும் எலுமிச்சம் பழங்களை பூஜைக்காக மட்டுமின்றி எப்பொழுது நறுக்கினாலும் “ஓம் தும் துர்கையே நம:” என கூறி துர்கா தேவியை மனதினுள் தியாநனித்தவாறே கீழிருந்து மேலாகத்தான் நறுக்க வேண்டும். இதுவே சரியான முறை.

ஓம் குருவே சரணம்.

நன்றி நண்பர்களே!
SURESH


அறுவை சிகிச்சை சுகமாய் முடிய


வணக்கம் நண்பர்களே!
     அறுவை சிகிச்சைக்காக மருத்துவரை அணுகுவோர் பூச நட்சத்திரத்தன்று சாமந்திப் பூவினால் மாலை கட்டி முறையாக ஸ்ரீரங்கநாதருக்கோ அல்லது ஸ்ரீஅனந்த பத்மநாப சுவாமிக்கோ அணிவித்து வணங்கினால் எத்தகைய வியாதியாக இருந்தாலும் அறுவை சிகிச்சையில் அற்புதமான முரையில் விரைவில் குணம் காணலாம். குறிப்பாக தேய்பிறையில்  வரும் பூச நட்சத்திரம் மிகவும் ஏற்றது. அன்று ஏழை நோயாளிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.
     அதே போன்று மருத்துவர்களும் ஒவ்வொரு பூச நட்சத்திரத்தன்றும் சாமந்திப்பூ  மாலை கட்டி ஸ்ரீரங்கநாதருக்கோ அல்லது ஸ்ரீஅனந்த பத்மநாப சுவாமிக்கோ அணிவித்து வணங்கி வந்தால் அவர்களை நாடி வரும் நோயாளிகள் அனைவரும் வியக்கத்தக்க முறையில் குணமடைவதைக் காணலாம். குறிப்பாக அறுவை சிகிச்சைகள் வெற்றியைத் தரும்.

ஓம் குருவே சரணம்.

நன்றி நண்பர்களே!

SURESH

Sunday, 21 December 2014

ஜாதகமும் தொழில் அமைப்பும் – பாகம் 10


வணக்கம் நண்பர்களே!

10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 8ம் பாவத்தினை தொடர்பு கொள்வது ஜாதகருக்கு கெடுதல் செய்யக் கூடிய அமைப்பினை தரும்.

10ம் பாவத்திற்கு 8ம் பாவம் சாதகமாக இருந்தாலும் லக்னத்திற்கு இந்த 8ம் பாவ தொடர்பு பிரச்சினைகளை கொடுக்கும்.

சார ஜோதிட விதியின் படி ஒரு பாவம் தன்னுடைய பாவத்திற்கு சாதகமான பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தாலும், லக்னத்திற்கு சாதகமாக இருந்தால் தான் ஜாதகரால் அந்த பாவத்தால் வரும் பலனை அனுபவிக்க முடியும்.

மேலும் இந்த 8ம் பாவ தொடர்பினால் ஜாதகர் தன்னுடைய தொழிலில் கடின உழைப்பு, வலி,வேதனை,அவமானங்கள், உழைப்பிற்கு ஏற்ற வருமானம் இல்லாமை, துரோகம், மற்றவரால் ஏமாற்றப்படுதல், விபத்து, எவ்வளவு தான் உழைத்தும் தொழிலில் முன்னேற்றம் இல்லாமை போன்றவை ஏற்றப்டும்.

மேலும் இந்த 8ம் பாவம் 2ம் பாவத்திற்கு 7ம் பாவமாக வரும். புறச்சர்புடைய பாவம் தனக்கு 7ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது அதனுடைய  பாவம் இந்த தொடர்பினால் கட்டுப் படுத்தப் படும் அல்லது சமப் படுத்தப் படும்.  எனவே இந்த தொடர்பின் மூலம் ஜாதகர் அதிக வருமானத்தினை(2ம் பாவம்) பெற முடியாது.

9ம் பாவம் என்பது லக்ன பாவத்திற்கு அனைத்து விதமான சுகத்தினையும் கொடுக்கக் கூடியது. 9ம் பாவம் என்பது எந்த வேலையும் செய்யாமல் சுகமாக இருப்பதை குறிக்கும். ஆனால் 9ம் பாதத்திற்கு 12ம் பாவமாகிய 8ம் பாவம் கடினமாக உழைப்பதை குறிக்கும். எனவே ஜாதகர் எப்பொழுதுமே உழைத்துக் கொண்டு இருப்பதனை குறிக்கும்.

இந்த தொடர்பினால் ஜாதகர் அவரின் தொழில் மூலம் அதிக பிரச்சினைகளையும், எதிர் மாறான விளைவுகளையும் அதிக கடன்களையும் அனுபவிப்பார்.

நன்றி நண்பர்களே!

SURESH

பங்குசந்தை ஆய்வு


நண்பர்களுக்கு வணக்கம்,
ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள், ஜோதிட நுணுக்கங்களை தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும், ஜோதிடத்தால் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்று. ஆனால் மனித வாழ்வியலில் ஜோதிடத்தை பயன்படுத்துவதற்கு நமக்கு தேவையான பயிற்சிகளை சிறந்த குருமார்கள் மூலமும் புத்தகங்கள் மூலம் பெற்று விடலாம்.
ஆனால் பணம் கொடுக்கக் கூடிய பங்குசந்தையை ஜோதிடத்தில் பயன்படுத்துவதற்கு உண்டான பயிற்சியோ புத்தகங்களோ அந்த அளவிற்கு தமிழில் இல்லை. மற்ற மொழிகளில் உண்டோ இல்லையோ எனக்கு தெரியாது.
ஆனால் நிறைய ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதற்கு உதாரணம் முகநூலில் ஷேர் மார்க்கெட்டின் போக்கினை பற்றி நிறைய பதிவுகள் தமிழகத்தின் ஜோதிடர்கள் மூலம் பதியப் படுகின்றன.
பங்கு சந்தையில் ஜோதிடம் என்பது ஆய்வு அளவில் தான் உள்ளது. அந்த ஆய்வினை அடியவனும் என்னுடைய நண்பரும் செய்து வருகிறோம். அதன் முடிவுகளை இந்த “பங்குசந்தை ஆய்வு” என்ற குருப்பில் பதிய இருக்கிறோம்.

https://www.facebook.com/groups/1541976862707130/

நாங்கள் பதியும் பதிவுகளை மார்க்கெட்டின் போக்கினை தெரிந்து கொள்ள மட்டும் பயன் படுத்திக் கொள்ளுங்கள். இதனை பார்த்து வர்த்தகத்தில் ஈடுபடவேண்டாம். அதாவது பங்கு சந்தையில் உங்களுக்கு ஏற்ப்படும் லாப நஷ்டத்திற்கு நாங்கள் பொறுப்பு அல்ல.
என்ன தான் பரிந்துரைகள் கிடைத்தாலும் பங்கு சந்தையில் ஈடுபடுவதற்கு கொடுப்பினை வேண்டும். 5ம் பாவம் கொண்டுதான் ஒருவருன் கொடுப்பினையை ஆராய வேண்டும். இந்த பாவம் அரசியல், சினிமா, ஷேர் மார்க்கெட் மற்றும் கமிசன் சம்மந்தமான அணைத்து தொழில்களையும் குறிக்கக் கூடியது.
ஆனால் தொழில் ஸ்தானமாகிய 10ம் பாவத்திற்கு மிகவும் பாதகமான பாவம் ஆகும். ஆகவே இந்த 5ம் பாவ ரீதியாக தொழில் செய்து சம்பாதித்து ஒரு சமூக அங்கீகாரம் கிடைக்கும் என்பது பெரிய கேள்விக்குறி. முடியவே முடியாது என்று சொல்ல வில்லை. கண்டிப்பாக அதற்கு கொடுப்பினை வேண்டும்.
ஷேர் மார்க்கெட் தொழில் ஈடுபட்டு இதுவரை நஷ்டப்பட்டு கொண்டே இருபவர்களும், இனிமேல் புதிதாக இதில் ஈடுபடுபவர்களும் தங்களுடைய ஜாதகத்தினை ஆராய்ந்து இந்த துறையில் ஈடுபாடுகள் அல்லது தொடர்ந்து செல்லுங்கள். ஏனென்றால் நீங்கள் உழைத்து சம்பாதித்த பணம், எனவே முடியுமா அல்லது முடியாத என்று தெரிந்து கொண்டு ஈடுபடுங்கள்.
கீழ்க்கண்ட ஆலோசனைகளை உங்களுடைய ஜாதகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
• நீங்கள் ஷேர்மார்க்கெட் தொழில் செய்ய கொடுப்பினை எப்படி உள்ளது? • நடைபெறும் தசா புத்திகள் ஒத்துழைப்பு உள்ளதா இல்லையா? • அடுத்து வரும் தசா ஒத்துழைப்பு தருமா?
• உங்களுக்கு தொடர்ந்து நஷ்டங்கள் வந்து கொண்டு இருந்தால், இந்த நிலை மாறுமா அல்லது இதுதான் தொடர்ந்து நடைபெறுமா?
• உங்கள் ஜாதகத்தின் படி உங்களுக்கு தின வர்த்தகம் சிறப்பா அல்லது முதலீடு சிறப்பா? என்பதை பற்றிய ஆய்வு
• உங்கள் ஜாதகத்தின் படி உங்களுக்கு பொருள் வணிகம் (Commodity) சிறப்பா?
• உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற செக்டார்ஸ் (Sectors) என்ன என்ன?
ஜோதிட ஆலோசனை பெற விரும்புவர்களுக்கு நான் சார ஜோதிட முறையில் உங்களுடைய ஜாதகத்தினை கணித்து மேற்கண்ட பலன்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தேவை இருந்தால் தொடர்பு கொள்ளவும்.
நாளை முதல் இந்த க்ரூப்பில் ஒவ்வொரு நாளும் எங்களுடைய ஜோதிட ஆய்வின் மூலம் வந்த சந்தையின் போக்கு பற்றிய முடிவுகளை பதிவு செய்வோம்.

https://www.facebook.com/groups/1541976862707130/

நன்றி நண்பர்களே 
SURESH SUNDAAR
9994690117

Wednesday, 17 December 2014

காதல் – பாகம் 2


 
காதல் – பாகம் 2

வணக்கம் நண்பர்களே!

முந்தய பதிவில் 1 முதல் 3 பாவங்களும் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் யாரை காதலிப்பார் என்று பார்த்தோம். இப்பொழுது 4 முதல் 12 பாவங்களும் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகருக்கு காதல் யார் மேல் வரும் என்பதை பார்ப்போம்.

4ம் பாவம் 5ம் பாவத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் ஒரே காம்பவுண்டில் வசிப்பரை அல்லது உறவினரை சிறு வயது முதல் காதலிப்பார்.

5ம் பாவம் 5ம் பாவத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் கலைர்களை காதலிப்பார்.

6ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் அடுத்த தெருவில் உள்ள நபர்களை அல்லது தனது பணியாளர்களை காதலிப்பார்.

7ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் எதிர் வீடு அல்லது பக்கத்து ஊரில் உள்ளவரை ஜாதகர் காதலிப்பார்.

8ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் சண்டை சச்சரவுகள் மூலம் தீடீர் என்று காதல் வசப்படுவார்.

9ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் வெளி மாநிலம் அல்லது அந்நிய மதத்தினரை காதலிப்பார்.

10ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் தன்னுடன் பணிபுரிவோரை காதலிப்பார்.

11 ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் நண்பர்களின் சகோதர சகோதிரிகளை காதலிப்பார்.

12 ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகரின் காதல் ஒருதலைக் காதலாக இருக்கும் அல்லது வெளிநாட்டவரை காதலிப்பார்.

நன்றி நண்பர்களே!
SURESH

Monday, 15 December 2014

காதல் – பாகம் 1


வணக்கம் நண்பர்களே!

காதல் என்பது ஒரு வித்தியாசமான உணர்வு. காதலில் அன்பு, நட்பு, காமம், ஆசை ஆகிய அனைத்தும் அல்லது ஏதோ ஒன்று மேலோங்கியும் இருக்கும். கண்டிப்பாக மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் மனதிலும் காதல் வந்தே தீரும். காதல் வந்தால் சந்தோசமும் வரும் பிரச்சினைகளும் வரும். அதை சமாளித்து வெற்றி பெற்றால் தான் உண்மையான காதல். 

சார ஜோதிட முறையில் ஜாதகர் யாரை காதலிப்பார் என்பதனை 5ம் பாவ உப நட்சத்திரம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலமாக 1ம் பாவத்தினை தொடர்பு கொண்டால் ஜாதகர் தன்னுடன் நன்கு பழகிய நபரினை காதலிப்பார். இந்த காதலினால் ஜாதகரின் கௌரவத்திற்கு இந்தவிதமான பிரச்சினைகளும் வராது.

சார ஜோதிட முறையில் ஒவ்வொரு பாவமும் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளுவதன் மூலம் ஜாதகர் யாரை காதலிப்பார் என தெரிந்து கொள்ளலாம்.

1ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகருக்கு அறிமுகமான நபரை காதலிப்பார்.

2ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது தன்னுடைய குடும்பத்தில் உள்ள ஒரு நபரையே ஜாதகர் காதலிப்பார். பொருளாதாரத்தை  மையமாக வைத்து காதல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

3ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது வீட்டின் பின்பக்கத்தில் குடி இருப்பவரை அல்லது தன்னுடைய வீட்டு வேலையாட்களை காதலிப்பார். 

காதல் தொடரும் ......

நன்றி நண்பர்களே!

Su.Suresh