Monday, 15 December 2014

காதல் – பாகம் 1


வணக்கம் நண்பர்களே!

காதல் என்பது ஒரு வித்தியாசமான உணர்வு. காதலில் அன்பு, நட்பு, காமம், ஆசை ஆகிய அனைத்தும் அல்லது ஏதோ ஒன்று மேலோங்கியும் இருக்கும். கண்டிப்பாக மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் மனதிலும் காதல் வந்தே தீரும். காதல் வந்தால் சந்தோசமும் வரும் பிரச்சினைகளும் வரும். அதை சமாளித்து வெற்றி பெற்றால் தான் உண்மையான காதல். 

சார ஜோதிட முறையில் ஜாதகர் யாரை காதலிப்பார் என்பதனை 5ம் பாவ உப நட்சத்திரம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலமாக 1ம் பாவத்தினை தொடர்பு கொண்டால் ஜாதகர் தன்னுடன் நன்கு பழகிய நபரினை காதலிப்பார். இந்த காதலினால் ஜாதகரின் கௌரவத்திற்கு இந்தவிதமான பிரச்சினைகளும் வராது.

சார ஜோதிட முறையில் ஒவ்வொரு பாவமும் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளுவதன் மூலம் ஜாதகர் யாரை காதலிப்பார் என தெரிந்து கொள்ளலாம்.

1ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகருக்கு அறிமுகமான நபரை காதலிப்பார்.

2ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது தன்னுடைய குடும்பத்தில் உள்ள ஒரு நபரையே ஜாதகர் காதலிப்பார். பொருளாதாரத்தை  மையமாக வைத்து காதல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

3ம் பாவம் 5ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது வீட்டின் பின்பக்கத்தில் குடி இருப்பவரை அல்லது தன்னுடைய வீட்டு வேலையாட்களை காதலிப்பார். 

காதல் தொடரும் ......

நன்றி நண்பர்களே!

Su.Suresh

No comments:

Post a Comment