ஓம் குருவே சரணம்!
மகாபாரதப் போருக்கு முன் ஒரு காட்சி
தர்மன் தன் சகோதரர்கள் பீமன், அர்ஜுனன்,நகுலன்,
சகாதேவன் அகியோரு டன் அமர்ந்திருகின்றான். கிருஷ்ணனும் ஏதோ நினைத்தபடியே இங்கும்
அங்கும் உலாவிக் கொண்டிருகின்றான்.
போரில் பாண்டவர்கள் வெற்றி பெற என்ன செய்யலாம்?
என்ற ஆராய்ச்சில் ஈடுபட்டிருந்த அவன் இப்பொழுது சகாதேவன் பக்கம் திரும்பி, அவனை
மட்டும் தனியே அழைக்கின்றார்.
ஜோதிட சாஸ்திரத்தை கசடறக் கற்றவன் சகாதேவன் என்பதை
பூரணமாக அறிந்தவர் கிருஷ்ணன்.
கிருஷ்ணனுடைய அவதார நோக்கத்தையும், அவன் நடத்தப்
போகும் நாடகங்களையும் நன்கு அறிந்தவன் சகாதேவன். அழைப்பிற்கு இணங்கி கிருஷ்ணனிடம்
வருகின்றான். கிருஷ்ணனும் அவனை ஒரு தனி இடத்திற்கு அழைத்துச் செல்கின்றார்.
கிருஷ்ணன்: “சகாதேவா! நியாயமான போட்டியில் வெற்றிக் காண்பதற்குச்
ஜோதிட ரீதியாக ஒரு வழி சொல்வாயா?”
சகாதேவன்: “கண்ணா! நீ என்னக் கேட்கின்றாய் என்று எனக்குத் தெரியும்.
நடக்கப் போகும் பாரதப் போரில் வெற்றி பெற வழி கேட்கின்றாய். ‘நியாயமான போட்டி’
என்று புரட்டுகின்றாய். எல்லாம் தெரிந்தவன் நீ. அமாவாசை நாளையே மாற்றியவன் நீ.
ஒன்றும் அறியாதவன் போல் கேட்டு என்னை எமாற்றுகின்றாயே?”
கிருஷ்ணன்: அப்படி இல்லை, சகாதேவா! என்ன இருந்தாலும் ஜோதிடக் கலையைக்
கசடறக் கற்று பாரபட்சம் இன்றி, வணங்கிக் கேட்போருக்கு வாரித் தருபவன் நீ. அடியேனும்
இப்பொழுது உன்னை வணங்கித்தான் கேட்கின்றேன் பதில் கிடைக்குமா? கிடைக்காதா?
சகாதேவன்: கண்ணை மூடி தீவிரமாக யோசித்து “திருமால் மத்தளம்
கொட்டுவான். அந்த நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய். நியமான போரில் வெற்றி
பெறுவாய்”
கிருஷ்ணன்: என்ன! திருமால் மத்தளம் கொட்டினானா? என்ன உளருகின்றாய்
என்று குறும்பாக சிரித்தபடி கேட்கின்றான்
சகாதேவன்: கிருஷ்ணா! உத்தம வழிபாட்டிற்கு உரிய தெய்வம் நீ இருந்தாலும்
நீயே செய்ய வேண்டிய அதி உத்தம வழிபாடு ஒன்று உண்டு. அந்த வழிபாட்டில் திருமால்
தவறாது மத்தளம் கொட்டுவார். அதைத்தான் சொன்னேன்!
கிருஷ்ணன்: சகாதேவா! ஆர்வத்தை தூண்டி விட்டு வேடிக்கைப் பார்கின்றாயே!
அந்த அதி உத்தம வழிபாடு யாது?
சகாதேவன்: கிருஷ்ணா அனைத்தையும் அறிந்தவன் நீ. இருந்தாலும்
மக்களுக்காகக் கேட்கின்றாய்! சொல்கின்றேன். ‘பிரதோஷம்’ என்று அதி உத்தம வழிபாடு
உண்டு. அதில் எம்பெருமானாகிய சந்திர சேகர மூர்த்தியும், அம்பிகையும் நந்தி வாகனத்தில்
அமர்ந்து பவனி வருவார்கள். அதயே ‘பிரதஷிணம்’ என்று சொல்வர்.
பிரதஷிணத்தில் பலவகைகள் உண்டு. அதில் உத்தமமானது ‘சோம சூக்த பிரதஷிணம்’ என்பதாகும்.
அந்த சோம சூக்த பிரதஷிணத்தில் ஈசன் வாகனத்தில், ஈசான்ய மூலைக்கு வரும் பொழுது மகா
தூப தீப ஆராதனைகள் நடக்கும். அதை குருவருளால் முறையாகத் தரிசனம் செய்தால்
முறையானப் போட்டியில் தவறாமல் வெற்றிக் கொள்ளலாம். மேலும் அந்த உத்தம வழிபாட்டின்
போதுதான் திருமால், திருக்கயிலாயத்தில் ஈசனுடைய நாட்டியத்திற்கு அற்புதமாக மத்தலம்
கொட்டுகின்றான்.
பிரதோஷ வழிபாட்டின் மகிமைகளில் மூழ்கிய நிலையில்
கிருஷ்ணன் தன் உத்தம குரு சாந்திபீனியிடம் வருகின்றான்.
உத்தம குருவும் தன்
சீடனுடைய உள்ளத்தை அறிந்து, அவனுக்கு சிவ லீலைத் தத்துவங்களைப் பக்குவமாக
உபதேசிக்கின்றார். அதில் இருந்து பிறந்ததே பிரதோஷ வழிபாட்டின் மகிமையும், பெருமையும்,
மக்கள் உணர்ந்து உய்யவே!
இவ்வாறு அவதார மூர்த்தியாகிய கண்ணனே அலைந்து
திரிந்து பிரதோஷ வழிபாட்டின் மகிமைகளை உணர்ந்தார் என்றால் மக்களாகிய நாம் இன்று வரை
பிரதோஷ வழிபாட்டின் மகிமையை உணர்ந்தோமா? அல்லது உணர முயற்சி செய்தோமா? அல்லது
உணர்ந்து அறிந்த உத்தமர்களைத்தான் நாடினோமா? இல்லை.
பிரதோஷ மகிமைகள் தொடரும்...
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
No comments:
Post a Comment