வணக்கம் நண்பர்களே!
10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 8ம்
பாவத்தினை தொடர்பு கொள்வது ஜாதகருக்கு கெடுதல் செய்யக் கூடிய அமைப்பினை தரும்.
10ம் பாவத்திற்கு 8ம் பாவம் சாதகமாக இருந்தாலும் லக்னத்திற்கு இந்த 8ம் பாவ
தொடர்பு பிரச்சினைகளை கொடுக்கும்.
சார ஜோதிட விதியின் படி ஒரு பாவம் தன்னுடைய பாவத்திற்கு சாதகமான
பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தாலும், லக்னத்திற்கு சாதகமாக இருந்தால் தான் ஜாதகரால்
அந்த பாவத்தால் வரும் பலனை அனுபவிக்க முடியும்.
மேலும் இந்த 8ம் பாவ தொடர்பினால் ஜாதகர் தன்னுடைய தொழிலில் கடின உழைப்பு,
வலி,வேதனை,அவமானங்கள், உழைப்பிற்கு ஏற்ற வருமானம் இல்லாமை, துரோகம், மற்றவரால்
ஏமாற்றப்படுதல், விபத்து, எவ்வளவு தான் உழைத்தும் தொழிலில் முன்னேற்றம் இல்லாமை
போன்றவை ஏற்றப்டும்.
மேலும் இந்த 8ம் பாவம் 2ம் பாவத்திற்கு 7ம் பாவமாக வரும். புறச்சர்புடைய பாவம்
தனக்கு 7ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் பொழுது அதனுடைய பாவம் இந்த தொடர்பினால் கட்டுப் படுத்தப் படும்
அல்லது சமப் படுத்தப் படும். எனவே இந்த
தொடர்பின் மூலம் ஜாதகர் அதிக வருமானத்தினை(2ம் பாவம்) பெற முடியாது.
9ம் பாவம் என்பது லக்ன பாவத்திற்கு அனைத்து விதமான சுகத்தினையும்
கொடுக்கக் கூடியது. 9ம் பாவம் என்பது எந்த வேலையும் செய்யாமல் சுகமாக இருப்பதை
குறிக்கும். ஆனால் 9ம் பாதத்திற்கு 12ம் பாவமாகிய 8ம் பாவம்
கடினமாக உழைப்பதை குறிக்கும். எனவே ஜாதகர் எப்பொழுதுமே உழைத்துக் கொண்டு இருப்பதனை
குறிக்கும்.
இந்த தொடர்பினால் ஜாதகர் அவரின் தொழில் மூலம் அதிக பிரச்சினைகளையும்,
எதிர் மாறான விளைவுகளையும் அதிக கடன்களையும் அனுபவிப்பார்.
நன்றி நண்பர்களே!
SURESH
No comments:
Post a Comment