வணக்கம் நண்பர்களே!
ஜாதகர் அரசியலில் ஈடுபட லக்ன பாவமும்,
5 ம் பாவம் சாதகமான முறையில் இருக்க வேண்டும்
என்று பார்த்தோம். அரசியலில் பெரிய தலைவர்களாக வருவதற்கு லக்ன பாவமும் 5ம் பாவமும்
1,6,11 பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் மிகவும் சிறப்பு.
ஏனென்றால் 1ம் பாவ தொடர்பின் மூலமாக
ஜாதகருக்கு சுய முயற்சி, சொந்த கருத்தினை வெளிப்படுத்தும் திறன்
என்பது நன்றாக இருக்கும். 6ம் பாவ தொடர்பின் மூலம் வெற்றி என்பது எளிதாக கிட்டும்.
11ம் பவ தொடர்பின் மூலம் சுய முயற்சிகள் வெற்றி பெறுபவராக இருப்பார்.
மேலும் அரசியலில் ஈடுபட சூரியன்,புதன் மற்றும் குரு ஆகிய கிரகங்கள்
நன்றாக இருக்க வேண்டும்.
சூரியன் நன்றாக இருந்தால் நிர்வாகம் செய்யும் திறமை,தலைமை தாங்கும்
திறன், ஆளுமை போன்றவற்றில் மிகச்சிறந்தவராக இருப்பார்.
அரசியலில் இருப்பவர்களுக்கு நியாபக சத்தி என்பது மிக முக்கியமானது.
தெளிவான சிந்தனை வேண்டும். இவற்றிக்கு காரகம் வகிப்பவர் புதன். எனவே புதன் 8
மற்றும் 12ம் பாவங்களுடன் தொடர்பு கொண்டு இருக்க கூடாது.
குரு நன்றாக இருந்தால் தொண்டர்கள் மற்றும் ஜாதகரின் அருகில்
இருப்பவர்கள் இவருடைய சொல்படி நடந்து கொள்ளவார்கள்.
எனவே குரு,சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் 5 மற்றும் 9ம்
பாவங்களை தொடர்பு கொண்டு இருக்க கூடாது. அப்படி 5 மற்றும் 9ம்
பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் அந்தஸ்து,புகழ் போன்றவற்றை இழந்து விடுவார்.
நிலையாக அரசியலில் இருக்க முடியாது. அடுத்தவருக்கு பதவியை விட்டு கொடுத்து
விடுவார்.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment