வணக்கம் நண்பர்களே!
உதாரணமாக சந்திரனின் அகம் சார்ந்த காரகங்கள் என்பது சிந்தனை,திருப்தி,உடலில்
உள்ள நீர்,இரத்தம்,சளி,அலைச்சல் ஆகும்.
சந்திரனின் புறம் சார்ந்த காரகங்கள் என்பவை அடிக்கடி பண வரவு,பத்திர
தொழில்,நீர் நிலைகளில் வேலை,மீன் பிடி தொழில்,வயல்களில் வேலை,நீர் மற்றும் திரவம்
சார்ந்த தொழில், கப்பல் மற்றும் கடல் மூலமான தொடர்புகள்,மருந்து வியாபாரம்
போன்றவைகள் ஆகும்.
சந்திரன் ஒற்றைப்படை பாவங்களுடன் தொடர்பு கொண்டால் சந்திரனின்
காரகங்கள் மூலம் ஜாதகரின் உடல் மற்றும் மனதிற்கு எந்தவிதமான பிரச்சினைகளும் வராது.
ஒற்றைப்படை பாவங்கள் என்பது 1,5,9 மற்றும் 3,7,11 என்ற இரண்டு திரிகோண பாவங்களையும் குறிக்கும்.
சந்திரன் 1,5,9 என்ற பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது சந்திரனின் புறசார்புடைய
காரகங்கள் (பத்திர தொழில்,நீர் நிலைகளில் வேலை,மீன் பிடி தொழில்,வயல்களில்
வேலை,நீர் மற்றும் திரவம் சார்ந்த தொழில், கப்பல் மற்றும் கடல் மூலமான
தொடர்புகள்,மருந்து வியாபாரம்) மூலம் ஜாதகருக்கு வருமானம் எதுவும் வராது. ஏனென்றல்
பொருள் திரிகோணமாகிய 2,6,10 ம் பாவங்களுக்கு 1,5,9 என்பவை தீமை தரும் அணியாக(12ம் பாவதொடர்பு) வரும்.
ஆனால் சந்திரனின் 3,7,11 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஒரு
அளவிற்கு ஜாதகருக்கு பொருளாதார முன்னேற்றம் இருக்கும். எனெற்றால் 2,6,10 என்ற
திரிகோணத்திற்கு 2,7,11 பாவங்கள் கெடுதல் செய்யாமல் நடுநிலை வகிக்கும்.
சந்திரனின் 2,6,10 என்ற பாவங்களை தொடர்பு கொண்டால் சந்திரனுடைய புறச்சார்பு காரகங்கள்
மூலம் சிறப்பான பொருளாதார முன்னேற்றம் இருக்கும். ஆனால் சந்திரனின் 2,6,10 தொடர்பு
அதனுடைய அகச்சார்புடைய காரகங்களை ஒரு அளவிற்குதான் அனுபவிக்க அனுமதிக்கும்.
மேலும் சந்திரனின் 6ம் பாவதொடர்பு மூலம் ஜாதகருக்கு மாத்திரை மற்றும் மருந்து மூலம்
குணப்படுத்த கூடிய அளவிற்கு மன பேதலிப்பு,இரத்த அழுத்தம் மற்றும் சீதள நோய்கள் நோய்கள்
வர வாய்ப்புகள் அதிகம்.
சந்திரனின் 8,12 பவதொடர்பு பெற்றால் அகம் மற்றும் புறச்சர்புடைய கரகன்களை ஜாதகாரால்
அணுபவிக்க முடியாது. அவற்றின் மூலம் ஜாதகருக்கு பிரச்சினைகள் நிறைய வரும். அதாவது புத்தி
பேதலித்தல், நியாபக மறதி,உடலில் உள்ள நீர் சத்துக்களில் பாதிப்பு,கல்வியில்
பிரச்சினனை மற்றும் ஜலத்தால் கண்டங்கள் நேரும்.
நன்றி
நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment