வணக்கம் நண்பர்களே!
நிலையான பாவங்கள் என்பது 1,2,6,7,10 ஆகும். இந்த பாவங்கள் தான் ஒவ்வொரு நாளும் பெரும்பான்மையான நேரங்களில் நம்மை வழிநடத்தி செல்பவைகள் ஆகும். இதில் 1 மற்றும் 7 ம் பாவங்கள் உயிர் பற்றான வாழ்கையும் 2,6,10 என்பவைகள் பொருள் பற்றான வாழ்கையையும் தொடர்புடையவைகள் ஆகும். இந்த 5 பாவங்களும் ஒருவருக்கு நல்ல முறையில் அமைந்தால் மிகச்சிறப்பான வாழ்க்கை அமையும். அதாவது நல்ல யோகமுடைய ஜாதகம் என்று சொல்லலாம்.
உதாரணமாக மேற்கூறிய பாவங்களில் 2 அல்லது 3 பாவங்கள் ஒருவருடைய ஜாதகத்தில் கெட்டுவிட்டால் அதனை ஒரு மத்திம யோகமுடைய ஜாதகம் என்று கூறலாம். ஒருவருக்கு நிலையான பாவங்கள் அனைத்தும் கெட்டு இருந்தால் வாழ்க்கை முழுவதும் சிரமங்களை அனுபவிக்க வேண்டியதுதான்.
ஒருவர் எப்படி உயர்ந்த நிலையில் இருந்தலும் 1,2,6,7,10 பாவங்களுக்கு எதிரான தசா,புத்தி,அந்தர,சூட்சம காலங்களில் சிரமங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும். அதாவது ஜாதகரின் மகிழ்ச்சி மற்றும் பொருளாதார ரீதியில் பிரச்சினையை சந்திக்க வேண்டும்.
நன்றி நண்பர்களே!
SU.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment