Saturday, 28 June 2014

லக்னம் சார்ந்த மற்றும் லக்னம் சாரத காரகங்கள் – சனி பகவான்



வணக்கம் நண்பர்களே!

சனியின் அகம் சார்ந்த காரகங்கள் என்பது மந்தம்,உடல் ஊனம்,கிழத்தோற்றம்,தாழ்வு மனப்பான்மை,அடிமைத்தனம்,கடின உழைப்பு,சந்தேக குணம் போன்றவை ஆகும்.

சனியின் புறம் சார்ந்தகாரகங்கள் என்பவை பிறர் பொருட்களை அபகரித்தல்,பொய் பத்திரங்கள்,புறம்போக்கு நிலம்,மண்பாண்டங்கள்,மார சாமான்கள்,விபச்சாரம்,கூலி வேலை போன்றவைகள் ஆகும்.

சனியின் ஒற்றைப்படை பாவங்களுடன் தொடர்பு கொண்டால் சனியின் காரகங்கள் மூலம் ஜாதகரின் உடல் மற்றும் மனதிற்கு எந்தவிதமான பிரச்சினைகளும் வராது.

சனியின் 1,5,9 என்ற பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது சனியின் புறசார்புடைய காரகங்கள் மூலம் ஜாதகருக்கு வருமானம் எதுவும் வராது.

ஆனால் சனியின் 3,7,11 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஒரு அளவிற்கு ஜாதகருக்கு பொருளாதார முன்னேற்றம் இருக்கும். எனெற்றால் 2,6,10 என்ற திரிகோணத்திற்கு 2,7,11 பாவங்கள் கெடுதல் செய்யாமல் நடுநிலை வகிக்கும்.

சனியின் 2,6,10 என்ற பாவங்களை தொடர்பு கொண்டால் சனியினுடைய புறச்சார்பு காரகங்கள் மூலம் சிறப்பான பொருளாதார முன்னேற்றம் இருக்கும். ஆனால் சனியின் 2,6,10 தொடர்பு அதனுடைய அகச்சார்புடைய காரகங்களை ஒரு அளவிற்குதான் அனுபவிக்க அனுமதிக்கும். 

சனியின் 8,12 பவதொடர்பு பெற்றால் அகம் மற்றும் புறச்சர்புடைய காரகங்கள்  மூலம் ஜாதகருக்கு பிரச்சினைகள் வரும். அதாவது கேவலப்படுத்தல், மிரட்டல்கள், மரண பயம், பொய் குற்றச்சாட்டு, பொய் வழக்குகள், கொடூர விபத்துக்கள்,தோல் வியாதி மூலம் பாதிப்புகள் ஏற்ப்படும்.

நன்றி நண்பர்களே!
SU.Suresh

astrovaasan@gmail.com

No comments:

Post a Comment