Saturday, 28 June 2014

அரசியல் யோகம் எப்படி அமையும்? - பாகம் 3



வணக்கம் நண்பர்களே!

அரசியலில் நல்லதொரு இடத்திற்கு வர 5ம் பாவம் மற்றும் லக்னபாவமும் சாதகமான முறையில் இருக்க வேண்டும் என்று பார்த்தோம்.  இனி வரும் பதிவுகளில் 5ம் பாவம் 1 முதல் 12 பாவங்களை தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரத்தின் மூலமாக தொடர்பு கொள்ளும்பொழுது ஜாதகரின் அரசியல் வாழ்க்கை எப்படி அமையும் என்பதனை சார ஜோதிட முறையில் பார்ப்போம்.

5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரத்தின் மூலமாக 1ம் பாவத்தை தொடர்புகொள்ளும் பொழுது ஜாதகர் தேர்தலில் எளிதாக வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமா இருக்கும். 5ம் பாவமும் 1ம் பாவமும் ஜாதகருக்கு சாதகமாக இருந்து  5ம் பாவம் 1ம் பாவத்தை தொடர்பு கொண்டு தசா புத்தியும் ஒத்துழைக்கும் பட்சத்தில் தேர்தலில் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

மேலும் 5ம் பாவத்தின் 1ம் பாவ தொடர்பு மூலமாக ஜாதகர் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை அதிகமாக பெற்று இருப்பார். இதனால் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் தன்னை எளிதாக மாற்றி கொள்ளுவார். கற்பனைத்திறன் நன்றாக  அமைந்து இருக்கும். எந்த ஒரு முடிவுகளையும் சுயேட்சையாக எடுத்து, எல்லாவிதமான குறுக்கீடுகளையும் எளிதாக சமாளித்து மக்கள் தொண்டு செய்பவராக இருப்பார்.

அத்துடன் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னுடைய சுய கவுரவத்தை  இழக்காமல் மக்களுக்காக நல்ல முடிவுகளை எடுத்து அதன் மூலம் நல்ல செயல்களை செய்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் சிறந்த தலைவராக விளங்குவார்.

நன்றி நண்பர்களே!

Su.Suresh

No comments:

Post a Comment