Saturday, 28 June 2014

லக்னம் சார்ந்த மற்றும் லக்னம் சாரத காரகங்கள் – செவ்வாய்


வணக்கம் நண்பர்களே!

செவ்வாயின் அகம் சார்ந்த காரகங்கள் என்பது கோபம்,துணிவு,உடல் வெப்பம்,தோற்றம்,ஆணவம்,தற்புகழ்ச்சி மற்றும் அமைதி இன்மை போன்றவை  ஆகும்.
செவ்வாயின் புறம் சார்ந்த காரகங்கள் என்பவை இயந்திரங்கள்,பெரிய தொழில்சாலைகள்,கட்டுமான தொழில்கள், கனரக வாகனங்கள்,விவசாய பண்ணைகள்,போலிஸ்,நிர்வாக துறை போன்றவைகள் ஆகும்.

செவ்வாயின் ஒற்றைப்படை பாவங்களுடன் தொடர்பு கொண்டால் செவ்வாயின் காரகங்கள் மூலம் ஜாதகரின் உடல் மற்றும் மனதிற்கு எந்தவிதமான பிரச்சினைகளும் வராது. ஒற்றைப்படை பாவங்கள் என்பது 1,5,9 மற்றும் 3,7,11 என்ற இரண்டு திரிகோண பாவங்களையும் குறிக்கும்.

செவ்வாயின் 1,5,9 என்ற பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது செவ்வாயின் புறசார்புடைய காரகங்கள் மூலம் ஜாதகருக்கு வருமானம் எதுவும் வராது. ஏனென்றல் பொருள் திரிகோணமாகிய 2,6,10 ம் பாவங்களுக்கு 1,5,9 என்பவை தீமை தரும் அணியாக(12ம் பாவதொடர்பு) வரும்.

ஆனால் செவ்வாயின் 3,7,11 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஒரு அளவிற்கு ஜாதகருக்கு பொருளாதார முன்னேற்றம் இருக்கும். எனெற்றால் 2,6,10 என்ற திரிகோணத்திற்கு 2,7,11 பாவங்கள் கெடுதல் செய்யாமல் நடுநிலை வகிக்கும்.

செவ்வாயின் 2,6,10 என்ற பாவங்களை தொடர்பு கொண்டால் செவ்வாயினுடைய புறச்சார்பு காரகங்கள் மூலம் சிறப்பான பொருளாதார முன்னேற்றம் இருக்கும். ஆனால் செவ்வாயின் 2,6,10 தொடர்பு அதனுடைய அகச்சார்புடைய காரகங்களை ஒரு அளவிற்குதான் அனுபவிக்க அனுமதிக்கும். 

செவ்வாயின் 8,12 பவதொடர்பு பெற்றால் அகம் மற்றும் புறச்சர்புடைய கரகன்களை மூலம் ஜாதகருக்கு பிரச்சினைகள் வரும். அதாவது சண்டை,தீவிரவாதம்,போலீஸ்,சகோதரர் தொல்லை,கோர விபத்துக்கள்,கலப்படம் மற்றும் கடத்தல் மூலம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

 
நன்றி நண்பர்களே!
SU.Suresh
astrovaasan@gmail.com

No comments:

Post a Comment