வணக்கம் நண்பர்களே!
5ம் பாவம் 2ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால் அந்த ஜாதகருக்கு மேடை பேச்சு மற்றும் நியாபக சக்தி நன்றாக இருக்கும் என்று பார்த்தோம்.
இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 3ம் பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.
5ம் பாவம் 3ம் பாவ தொடர்பினை பெரும் பொழுது ஜாதகர் சிறு பிரயானங்களை அரசியல் காரணங்களுக்காக செய்து கொண்டே இருப்பார். மேலும் இவர் மக்களுக்கு எதை மட்டும் கூற வேண்டுமோ அதைமட்டும் தெளிவாக புரியும்படியாக பேசுவார்.
இவரைப்பற்றி அடிக்கடி பதிரிக்கையில் செய்தி வந்துகொண்டே இருக்கும். அதன் மூலமாக இவருக்கு செல்வாக்கும் மற்றும் புகழ் அதிகரிக்கும். மேலும் ஜாதகர் அரசியல் சார்ந்த நூல்களை வெளியிடுவார். விளம்பரங்களில் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.
சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை எளிதாக மற்றிகொள்ளும் திறமை வாய்ந்தவராக திகழ்வார். மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டு புகழ் பெறுவார்.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
Su.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment