வணக்கம் நண்பர்களே!
நாம் இதுவரை லக்னம் சார்ந்த மற்றும் லக்னம் சாராத காரகங்களை
பாவகாரகங்களில் இருந்து பார்த்தோம். அடுத்ததாக இனி வரும் பதிவுகளில் கிரக
கரகங்களில் லக்னம் சார்ந்த மற்றும் லக்னம் சாராத காரகங்களை பிரித்து எப்படி
ஜாதகருக்கு பலன்கள் சொல்லுவது என்று பார்ப்போம்.
நாம் முதலில் சூரியன் என்ற கிரகத்தை எடுத்துக்கொள்வோம்.
பொதுவாக சூரியனுடைய காரகங்கள் என்பது அரசாங்கம், நிர்வாகம்
செய்யும் திறன், தலைமை தங்குதல், மூளை,இருதயம் மற்றும் உடலில் உள்ள எலும்புகள் ஆகும்.
சூரியன் ஒற்றைப்படை பாவங்களுடன் தொடர்பு கொண்டால் சூரியனின் காரகங்கள்
மூலம் ஜாதகரின் உடல் மற்றும் மனதிற்கு எந்தவிதமான பிரச்சினைகளும் வராது.
ஒற்றைப்படை பாவங்கள் என்பது 1,5,9 மற்றும் 3,7,11 என்ற இரண்டு திரிகோண பாவங்களையும் குறிக்கும்.
சூரியன் 1,5,9 என்ற பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது சூரியனின் புறசார்புடைய
காரகங்கள் (நிர்வாக திறன், தலைமை தங்குதல், அரசாங்கம்) மூலம் ஜாதகருக்கு வருமானம் எதுவும் வராது. ஏனென்றல் பொருள்
திரிகோணமாகிய 2,6,10 ம் பாவங்களுக்கு 1,5,9 என்பவை தீமை தரும் அணியாக(12ம் பாவதொடர்பு) வரும்.
ஆனால் சூரியன் 3,7,11 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஒரு அளவிற்கு ஜாதகருக்கு பொருளாதார
முன்னேற்றம் இருக்கும். எனெற்றால் 2,6,10 என்ற திரிகோணத்திற்கு 2,7,11
பாவங்கள் கெடுதல் செய்யாமல் நடுநிலை வகிக்கும்.
சூரியன் 2,6,10 என்ற பாவங்களை தொடர்பு கொண்டால் சூரியனுடைய புறச்சார்பு காரகங்கள்
மூலம் சிறப்பான பொருளாதார முன்னேற்றம் இருக்கும். ஆனால் சூரியனின் 2,6,10 தொடர்பு
அதனுடைய அகச்சார்புடைய காரகங்களை ஒரு அளவிற்குதான் அனுபவிக்க அனுமதிக்கும்.
மேலும் சூரியனின் 6ம் பாவதொடர்பு மூலம் ஜாதகருக்கு மாத்திரை மற்றும் மருந்து மூலம்
குணப்படுத்த கூடிய அளவிற்கு மூளை,எலும்புகள் மற்றும் இருதயத்தில் நோய் வர வாய்ப்புகள் அதிகம்.
சூரியன் 8,12 பவதொடர்பு பெற்றால் அகம் மற்றும் புறச்சர்புடைய கரகன்களை ஜாதகாரால்
அணுபவிக்க முடியாது. அவற்றின் மூலம் ஜாதகருக்கு பிரச்சினைகள் நிறைய வரும். சூரியன்
4ம் பாவ தொடர்பு புறச்சர்புடைய காரகங்களுக்கு தீமை செய்யது. ஆனால் நோய்
என்ற காரகத்தை சற்று வலிமையுடன் செயல்படுத்தும்.
நன்றி
நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment